மலையாள திரைத் துறையில் அடூர் பாசியின் படங்களில் உதவி தயாரிப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் விஜயன் பிள்ளை. சினிமாவில் பேரும் புகழும் பெற்ற இவர், தற்போது விவசாயத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார். கேரளாவில் உள்ள மேற்கு கல்லடாவின் கொல்லம் மாவட்டத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய அழகான காய்கறித் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.
விஜயனுடைய தோட்டத்தில் பீன்ஸ், பூசணிக்காய், கேரட், வெண்டைக்காய், தக்காளி, பலவகை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. அதில் சில காய்கறிகள் பாரம்பரிய முறைப்படி பயிரிடப்படுகின்றன. சிலவகை காய்கள் ஹைட்ரோபோனிக் தொழில்நுட்பத்தில் விளைவிக்கப்படுகிறது. மேலும், உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிலவகை தாவரங்கள் மண்ணில் வளர்க்கப்படாமல், தண்ணீரில் வளர்க்கப்படுகின்றன.
மேலும், அவர் காய்கறிகள் வளர்க்க பசுமை இல்லத்தை உருவாக்கியுள்ளார். அதனை கண்ணாடி போன்ற ஊடுருவும் தன்மைகொண்ட பொருள் அல்லது பாலீதினால் (பாலிஹவுஸ்) உருவாக்கியுள்ளார். இப்படி உருவாக்குவதன் மூலம் தாவரங்கள் நன்கு வளர்வதுடன், காலநிலையை சமாளிக்கவும் முடிகிறது.
இந்த பாலிஹவுஸ் ஆனது பச்சை மிளகாய் உற்பத்தி செய்ய பெரிதும் பயன்படுகிறது. எந்தவித ரசாயன உரங்கள் இல்லாமல் பயிரிடப்படும் காய்கறி தோட்டம் குறித்த ஆர்வலர்கள் விஜயினுடைய வீட்டிற்கு வருகைதந்து பார்வையிடுகின்றனர். அதனுடன் தோட்டத்தை சுற்றி பார்க்க வரும் நபர்கள் அங்கு விளையும் காய்கறிகளை வாங்கிச் செல்லவதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கிறது.