ETV Bharat / bharat

புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்

author img

By

Published : May 28, 2020, 3:12 PM IST

Updated : May 28, 2020, 9:54 PM IST

ஸ்ரீநகர்: பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை குறிவைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். வாகனத்தில் 40 முதல் 45 கிலோ வரை வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம் என காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Police
Police

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க நினைத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ”ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் உள்ள ஒரு பயங்கரவாதி இந்த சதிவேலையை செய்யப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் புல்வாமா சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கார் ஒன்று காவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காரை பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது, காருக்குள் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அதை அப்புறப்படுத்தி ஆள்நடமாட்டம் இல்லாத வேறொரு இடத்தில் வைத்து வெடிக்க வைத்தோம். சரியான நேரத்தில் காவலர்கள் எடுத்த துரிதமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகம் அடைகிறோம்.

புல்வாமா கார் வெடிகுண்டு

பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை குறிவைக்கும் நோக்கில் இவர்கள் இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். வாகனத்தில் 40 முதல் 45 கிலோவரை வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதேபோன்ற ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புல்வாமாவில் வெடிகுண்டு சதித்திட்டம் முறியடிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காரில் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்க நினைத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ”ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் உள்ள ஒரு பயங்கரவாதி இந்த சதிவேலையை செய்யப்போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் புல்வாமா சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த கார் ஒன்று காவலர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காரை பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது, காருக்குள் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அதை அப்புறப்படுத்தி ஆள்நடமாட்டம் இல்லாத வேறொரு இடத்தில் வைத்து வெடிக்க வைத்தோம். சரியான நேரத்தில் காவலர்கள் எடுத்த துரிதமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகம் அடைகிறோம்.

புல்வாமா கார் வெடிகுண்டு

பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை குறிவைக்கும் நோக்கில் இவர்கள் இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளனர். வாகனத்தில் 40 முதல் 45 கிலோவரை வெடிகுண்டுகள் இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதேபோன்ற ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புல்வாமாவில் வெடிகுண்டு சதித்திட்டம் முறியடிப்பு!

Last Updated : May 28, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.