ETV Bharat / bharat

தொடரும் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல்!

author img

By

Published : Nov 13, 2019, 6:51 PM IST

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வருகிற 27ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

p chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

எனினும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததையடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தின் காவலை 14 நாட்கள் நீட்டிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு வருகிற 27ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அராஜக தேச பக்தி தோல்வி அடையும் - ப. சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

எனினும், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில், அமலாக்கத்துறையினர் பிடியில் டெல்லி திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ப.சிதம்பரத்தின் காவல் முடிவடைந்ததையடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிதம்பரத்தின் காவலை 14 நாட்கள் நீட்டிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு வருகிற 27ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அராஜக தேச பக்தி தோல்வி அடையும் - ப. சிதம்பரம்

Intro:Body:

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு |


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.