ETV Bharat / bharat

18 லட்சத்தைக் கடந்த கரோனா!

author img

By

Published : Aug 3, 2020, 1:23 PM IST

நாட்டில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது.

India COVID-19 tracker: State-wise report
India COVID-19 tracker: State-wise report

கடந்த சில நாள்களால நாட்டில் ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் (ஆகஸ்ட் 2) புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 3) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து மூன்று ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் 771 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டு முழுமையாக குணமடைந்தனர். அதனடிப்படையில் தற்போது ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் நான்கு லட்சத்து 41 ஆயிரத்து 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 809 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 613 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆயிரத்து 132 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 27 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், நாட்டில் இதுவரை மொத்தம் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குப்பை வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளிகள்!

கடந்த சில நாள்களால நாட்டில் ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் (ஆகஸ்ட் 2) புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 3) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து மூன்று ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் 771 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டு முழுமையாக குணமடைந்தனர். அதனடிப்படையில் தற்போது ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் நான்கு லட்சத்து 41 ஆயிரத்து 228 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 809 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 613 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆயிரத்து 132 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 27 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், நாட்டில் இதுவரை மொத்தம் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குப்பை வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட கரோனா நோயாளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.