ETV Bharat / bharat

குடும்பத் தகராறு: மனைவியை கொன்ற கணவர் தற்கொலை!

author img

By

Published : Jun 1, 2020, 7:04 PM IST

புதுச்சேரி: குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் தற்கொலை
மனைவியை கொலை செய்த கணவர்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. மீனவரான இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மன அழுத்த நோய் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகா மீது எரிந்துள்ளார்.

மனைவி இறந்த அதிரச்சியில் கணவர் தற்கொலை
மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

சிலிண்டர், மேனகா தலையில் பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணியம் தானும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து பார்க்கையில் கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கணவர், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியதால், குடும்ப தகராறில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. மீனவரான இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மன அழுத்த நோய் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த சிலிண்டரை எடுத்து தனது மனைவி மேனகா மீது எரிந்துள்ளார்.

மனைவி இறந்த அதிரச்சியில் கணவர் தற்கொலை
மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

சிலிண்டர், மேனகா தலையில் பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணியம் தானும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து பார்க்கையில் கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கணவர், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறியதால், குடும்ப தகராறில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.