ETV Bharat / bharat

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்கள் அடக்கம்!

author img

By

Published : Mar 20, 2019, 1:57 PM IST

வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்கள் அடக்கம்


நியூசிலாந்தின் கிறிஸ்ச் சர்ச் நகரில் மார்ச் 15ஆம் தேதி அல்நூர் மசூதியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட், மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ச் சர்ச் மாவட்ட நீ்திமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப்போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் நியூசிலாந்தில் 2018ஆம் ஆண்டு தஞ்சமடைந்த கலீத் முஸ்தபா (44), அவரது மகன் ஹம்ஸா (16) ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில், முதற்கட்டமாக இவர்கள் இருவரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கலீத் முஸ்தபாவின் இரண்டாவது மகன் ஜியாத், கண்ணீர் மல்க இறுதிச் சடங்கில் பங்கேற்றது அங்கிருந்த ஏராளமானோர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்தின் கிறிஸ்ச் சர்ச் நகரில் மார்ச் 15ஆம் தேதி அல்நூர் மசூதியில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் டாரன்ட், மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ச் சர்ச் மாவட்ட நீ்திமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப்போர் உக்கிரத்தை தாங்க முடியாமல் நியூசிலாந்தில் 2018ஆம் ஆண்டு தஞ்சமடைந்த கலீத் முஸ்தபா (44), அவரது மகன் ஹம்ஸா (16) ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகினர்.

இந்நிலையில், முதற்கட்டமாக இவர்கள் இருவரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கலீத் முஸ்தபாவின் இரண்டாவது மகன் ஜியாத், கண்ணீர் மல்க இறுதிச் சடங்கில் பங்கேற்றது அங்கிருந்த ஏராளமானோர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.