கரோனா வைரஸ் உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்றுவருகிறது. இந்த வைரஸ் சுவாச மண்டலத்தை மட்டுமே தாக்குகிறது என்று நாம் கருதுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வைரஸ் கண்கள், இதயம்,கல்லீரல், மூளை மற்றும் சிறுநீரகங்கள் போன்ற பல உறுப்புகளைப் பாதிக்கிறது.
லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் அஜய் ஷா, வைரஸ் தாக்கத்தின் அளவு முன்னர் கருதப்பட்டதை விட, அதிகமாக இருப்பதாகக் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகளை ஆராய்ந்த பின்னர், அவர் இதனை தெரிவித்தார். அறிகுறியற்ற நிகழ்வுகளுக்கு மேலதிகமாக, மீட்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளில் கோவிட்-19 பெருந்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மீண்டும் காணப்படுகிறது.
நாசி செல்கள்(மூக்கு) கரோனா வைரஸ் துகள்களை ஈர்க்க அதிக வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், வைரஸ் நாசிக்குள் இருக்கும். இந்த நேரத்தில், வாசனை உணர்வை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இழக்கக்கூடும். பின்னர் வைரஸ் மெதுவாக நாசி குழி வழியாகத் தொண்டைக்குள் செல்கிறது.
![How does coronavirus kill? Professor Ajay Shah at King’s College Hospital covid19 explained what is coronavirus coronavirus pandemic Acute Respiratory Distress Syndrome JAMA Cardiology journal கரோனா வைரஸ் எப்படி கொல்கிறது ஆட்கொல்லி கரோனா வைரஸ் கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, உயிர்க்கொல்லி, சீனா, வூகான், இதயம், சிறுநீரகப் பிரச்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/test-kits_3004newsroom_1588231947_620.jpg)
அதன்பின்னர் உள்ளே சென்று உயிரணுக்களுடன் பிணைக்கப்பட்டு, வைரஸ் பெருகத் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், வைரஸை மற்றவர்களுக்கு அவர்கள் பரப்பும் வாய்ப்பு உருவாகும்.
வைரஸ் தொண்டையில் நுழையும் போது, நமது நோய் எதிர்ப்பு சக்தி செயல்பட தவறினால், அது நம் நுரையீரலுக்குள் தங்கிவிடும்.
வைரஸ் பெருக்கம், காற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கியதும், வைரஸ் புரதங்கள் நுரையீரல் செல்களுக்குள் நுழைகின்றன. இதையடுத்து நுரையீரல் வீக்கமடைந்து, சுவாசிப்பது கடினமாகிறது. இது நிமோனிடிஸ் (நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னை) என்ற நிலையை ஏற்படுத்துகிறது.
சுவாச தசைகள் வீங்கி, நுரையீரலில் திரவம் சேகரிக்கப்படுகிறது. சில நோயாளிகள் கடுமையான சுவாசக் குழாய் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. மேலும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆபத்தான அளவிற்கு குறைகிறது. இந்நிலையில், நோயாளிக்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது.
ஆனால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. வென்டிலேட்டர்கள் தொடர்ந்து இயந்திர சுவாசத்தை அளிக்கும்போது, நோய் எதிர்ப்பு அமைப்பு வைரஸை எதிர்த்துப் போராட மட்டுமே காத்திருக்க முடியும். இக்கட்டத்தில் அதிகப்படியான செயல்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை விஞ்ஞானிகள் கவனித்துள்ளனர்.
இம்யூனோகுளோபின்கள் ஹோஸ்ட் செல்களைத் தாக்குகின்றன. அதையடுத்து உடல் முழுவதும் வீங்கி, இதய துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்கள் வீக்கமடைகின்றன. சுமார் 20 சதவீத பேருக்குச் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் உறுப்பு செயல் இழப்பால் இறப்பதற்கு இதுவே காரணம்.
![How does coronavirus kill? Professor Ajay Shah at King’s College Hospital covid19 explained what is coronavirus coronavirus pandemic Acute Respiratory Distress Syndrome JAMA Cardiology journal கரோனா வைரஸ் எப்படி கொல்கிறது ஆட்கொல்லி கரோனா வைரஸ் கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, உயிர்க்கொல்லி, சீனா, வூகான், இதயம், சிறுநீரகப் பிரச்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/b92298489ffada1cfc4ac06dad4907b8_2904newsroom_1588144706_994.jpg)
இதயம் மற்றும் ரத்த நாளங்களில், என்.சி.ஓ.வி வைரஸின் தாக்கம் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. இது ரத்த நாளங்களை அவற்றின் சுவர்களைத் தாக்கி, இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. ஜமா கார்டியாலஜியின் அறிவிப்பின்படி, வூஹானில் 416 கரோனா நோயாளிகள் பற்றிய ஆய்வில், அவர்களில் 20 சதவீதம் பேர் இதய செயலிழப்பால் இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
எனவே, கோவிட்-19 நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ள நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. கடுமையான வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில், கல்லீரல் நொதிகளின் பாதிப்பு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்பொருள், கரோனா வைரஸ் கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது என்பதுதான்.
இது மருந்துகளின் விளைவாகவா அல்லது அதிகப்படியான செயலற்ற நோய் எதிர்ப்பு மண்டலமா என்பதை கண்டறிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. சீனாவின் வூஹானில் கடுமையான பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 85 கரோனா நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில், 27 சதவீதத்தினருக்குச் சிறுநீரக செயலிழப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
![How does coronavirus kill? Professor Ajay Shah at King’s College Hospital covid19 explained what is coronavirus coronavirus pandemic Acute Respiratory Distress Syndrome JAMA Cardiology journal கரோனா வைரஸ் எப்படி கொல்கிறது ஆட்கொல்லி கரோனா வைரஸ் கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, உயிர்க்கொல்லி, சீனா, வூகான், இதயம், சிறுநீரகப் பிரச்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9f7174f681ee0603e6ef83cd1b7e8dcc_2904newsroom_1588144706_596.jpg)
இது சிறுநீரகங்களில் ரத்த அழுத்தம் குறைவின் காரணமாக ஏற்பட்டதா என்று மருத்துவர்களால் இதுவரை அடையாளம் காணவில்லை.
ஜப்பானில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தினார். அவரது பெருமூளை பகுதியில் வைரஸின் தடயங்களை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கரோனா வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தில் ஊடுருவக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
![How does coronavirus kill? Professor Ajay Shah at King’s College Hospital covid19 explained what is coronavirus coronavirus pandemic Acute Respiratory Distress Syndrome JAMA Cardiology journal கரோனா வைரஸ் எப்படி கொல்கிறது ஆட்கொல்லி கரோனா வைரஸ் கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, உயிர்க்கொல்லி, சீனா, வூகான், இதயம், சிறுநீரகப் பிரச்னை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5e141533024e00d92dcc4365517ebad6_2904newsroom_1588144706_1104.jpg)
பொதுவாக கரோனா வைரஸ் நோயாளிகளில் கால், கை வலிப்பு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளையும் கொண்டுள்ளது. நோயாளிகளை தொடர்ந்து கவனிப்பதில் இருந்து, நிறைய நோயாளிகள் முதலில் அல்லது வந்தபின் குழப்பமடைகிறார்கள். இது அடிப்படையில், மூளையில் ஏதோ சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.
வைரஸ் நேரடியாக மூளையைப் பாதிக்கிறதா அல்லது அது ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாக உள்ளதற்கான அறிகுறியா என்று உறுதியாக தெரியவில்லை என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் டங்கன் யங் தெரிவித்தார்.
'நாங்கள் பலவிதமான நோய்களைப் பார்க்கிறோம்.
ஆனால் சிலருக்கு ரத்த உறைவு, சிலருக்கு மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஏற்படுகிறது. இன்னும் பல அறியப்படாதவை உள்ளன. ஆனால், கோவிட்-19 நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஆராய்ச்சி தனித்துவமானது 'என்று, லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ஆலோசகர் இருதயநோய் நிபுணர் பேராசிரியர் அஜய் ஷா கூறினார்.