ETV Bharat / bharat

சுயமரியாதை இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் - ஆளுநரிடம் சரத் பவார் கோரிக்கை

author img

By

Published : Oct 19, 2020, 6:28 PM IST

சர்ச்சைக்குரிய கடிதம் எழுதிய மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை விமர்சித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

Pawar to Koshiyari
Pawar to Koshiyari

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடியுள்ள நிலையில், அங்குள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

முதலமைச்சர் மதச்சார்பற்றவராக எப்போது மாறினார் என்று ஆளுநர் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் கருத்தை வெளியிட்டதைக் கண்டித்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கின.

குறிப்பாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் இதுபோன்ற முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் முக்கியக் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆளுநர் கோஷியாரிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பவார், கோஷியாரிக்கு தன்மானம், சுயமரியாதை இருக்கும்பட்சத்தில் உடனடியாக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இத்தகைய பொறுப்பிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? நான் இதுவரை பல ஆளுநர்களை பார்த்திருக்கிறேன். யாரும் இப்படி பேசியதில்லை என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடியுள்ள நிலையில், அங்குள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

முதலமைச்சர் மதச்சார்பற்றவராக எப்போது மாறினார் என்று ஆளுநர் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் கருத்தை வெளியிட்டதைக் கண்டித்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கின.

குறிப்பாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் இதுபோன்ற முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசின் முக்கியக் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆளுநர் கோஷியாரிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பவார், கோஷியாரிக்கு தன்மானம், சுயமரியாதை இருக்கும்பட்சத்தில் உடனடியாக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இத்தகைய பொறுப்பிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? நான் இதுவரை பல ஆளுநர்களை பார்த்திருக்கிறேன். யாரும் இப்படி பேசியதில்லை என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.