இந்தியாவின் புகழ்பெற்ற பிகானேர் (Bikaner) முன்னாள் மகாராணியான பத்ம குமாரி நெஞ்சுவலி காரணமாக ஜூன் 7ஆம் தேதி ஹால்டிராம் மூல்சந்த் இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், அவருக்கு மருத்துவர்கள் தீவிர மருத்துவம் மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி பத்ம குமாரி நேற்று முன்தினம் (ஜூன் 8) காலமானார்.
இவர் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சம்பா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டு காலமான முன்னாள் பிகானேர் மகாராஜா நரேந்திர சிங்கை மணந்தார்.
இதையும் படிங்க: பெருநிறுவன வரி காலக்கெடு நீட்டிப்பு? நிதியமைச்சர் சூசகம்!