தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூரையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.
மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும், 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளை சூறையாடியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ஒரு சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 280 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.
மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களும் நகர்புறப் பகுதிகளுடனான தொடர்பை இழந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள குழுவினர் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கிழக்கு கோதாவரியிலும் 30 பேர் அடங்கிய குழுவினர் மேற்கு கோதாவரியிலும் முகாமிட்டுள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர்.