மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், மாணவ - மாணவிகள் உள்ளிட்டோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
![flag march against caa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/br-ara-01-flagmarch-visbyte-7204693_30012020103817_3001f_1580360897_1056.jpg)
அதன் ஒருபகுதியாக, பிகார் மாநிலம் கோசி பாலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான இஸ்லாமியர்கள், 100 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடியுடன் பேரணி நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.