மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவினர் நடத்திய மாபெரும் பேரணியில் அக்கட்யின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். நகரின் முக்கியச் சாலைகளில் நடைபெற்ற இந்தப் பேரணி வித்யாசாகர் கல்லூரி அருகே வந்தபோது திருணாமுல் - பாஜகவினர் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின்போது புகழ்பெற்ற எழுத்தாளர் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வித்தியாசாகர் கல்லூரி மாணவர் ஒருவர், கொல்கத்தாவின் அம்ஹெர்ஸ்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
![amitshah](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3285525_amitshahfir.jpg)
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் அமித் ஷா மீது முதற்கட்ட தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.