ETV Bharat / bharat

அரசுக் கூட்டுறவுச் சங்க ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புதுச்சேரி: மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசுக் கூட்டுறவுச் சங்க ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
author img

By

Published : Jun 25, 2019, 8:02 AM IST

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை குழு அறையில் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக அமைச்சர்கள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அரசுக் கூட்டுறவுச் சங்க ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அப்போது பேசிய அவர் ’புதுச்சேரியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, அரசு லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இரண்டும் தற்போது இயங்கவில்லை. அதனை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடுமையான வறட்சியில் வாடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் எனக் கடந்த 2017-2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஒருங்கிணைந்த இழப்பீடு அனைவருக்கும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்றார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை குழு அறையில் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக அமைச்சர்கள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அரசுக் கூட்டுறவுச் சங்க ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அப்போது பேசிய அவர் ’புதுச்சேரியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, அரசு லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இரண்டும் தற்போது இயங்கவில்லை. அதனை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடுமையான வறட்சியில் வாடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் எனக் கடந்த 2017-2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஒருங்கிணைந்த இழப்பீடு அனைவருக்கும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்றார்.

Intro:புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சக்கரை ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் சங்கம் வலியுறுத்தியுள்ளது


Body:புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை கமிட்டி அறையில் பட்ஜெட் சம்பந்தமான முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் அத்துறை அதிகாரிகள் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது அப்போது இத்துறையின் கீழ் செயல்படும் அதிகாரிகளுடன் அத்துறை சம்பந்தமாகவும் செயலாளர்கள் மற்றும் விவசாயிகளும் ஆலோசனைகள் கேட்கப்பட்டன கூட்டத்திற்கு பின்

புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது பேசிய அவர் புதுச்சேரியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மற்றும் அரசு லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சக்கரை ஆலை இரண்டும் தற்போது இயங்கவில்லை என்றும் அதனை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும்,

விவசாயிகள் கடுமையான வறட்சியின் வாடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு போதவில்லை என்றும் கூறினார் அதனால் தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் என கடந்த 2017-2018ஆண்டு வழங்கப்பட்டது ஒரே ஆலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரும்பு விவசாயிகள் உள்ளனர் ஆனால் புதுச்சேரி கரும்பு விவசாயிகளுக்கு இதேபோல் வழங்கப்படவில்லை எனவே புதுச்சேரியில் தமிழகத்தில் வழங்கப்பட்டது போல் புதுச்சேரி விவசாயிகளுக்கு கிடைக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி வறட்சியால் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே ஒருங்கிணைந்த இழப்பீடு அனைவருக்கும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றார் புதுச்சேரியில் 5 லட்சம் விவசாயிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


Conclusion:புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள அரசு சக்கரை ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் சங்கம் வலியுறுத்தியுள்ளது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.