ETV Bharat / bharat

கல்லறை வளாகத்தில் வசிக்கும் குடும்பம்

author img

By

Published : Jan 6, 2020, 10:07 AM IST

Updated : Jan 6, 2020, 10:24 AM IST

புதுச்சேரி: கல்லறை வளாகத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகளுடன் பயமின்றி வாழ்க்கை நடத்தும் குடும்பம் தரமான கான்கிரீட் கட்டடம் கோரியுள்ளனர்.

கல்லறையில் குடும்பம்
கல்லறையில் குடும்பம்

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தென்னஞ் சாலை செல்வந்தர்கள் வாழும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் அமைந்துள்ள கல்லறை வளாகத்தில் ஒரு குடும்பம் பல வருடங்களாக வசித்து வருகிறது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மேலும் விசாரித்ததில், இடுகாட்டில் சடலங்களுக்கு குழி வெட்டும் தொழில் செய்துவரும் காமாட்சி குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசிப்பதற்கு வீடு இல்லாமல் இடுகாட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இடுகாட்டிலேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

கல்லறைகளுக்கிடையே பல ஆண்டுக் காலமாக குழந்தைகளுடன் பயமின்றி வாழ்க்கை நடத்தும் குடும்பம்

இதுகுறித்து இக்குடும்பதினைச் சேர்ந்த பள்ளி மாணவி சௌமியா கூறுகையில்," அரசுப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறேன். எனது தாத்தா காலத்திலிருந்து இந்தச் சுடுகாட்டிலேயே வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளைகள் இந்த வளாகத்திலேயே விளையாடி வருகிறோம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடுகாடு முழுவதும் விளையாட்டு களம் தான் என்றார். சமூக அமைப்பு மூலம் எதேனும் உதவி கிடைத்தால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஏதுவாகும் என்று கோருகின்றனர் காமாட்சி குடும்பத்தினர்.

இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் சாரைப் பாம்புகள் களியாட்டம்!

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள தென்னஞ் சாலை செல்வந்தர்கள் வாழும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் அமைந்துள்ள கல்லறை வளாகத்தில் ஒரு குடும்பம் பல வருடங்களாக வசித்து வருகிறது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து மேலும் விசாரித்ததில், இடுகாட்டில் சடலங்களுக்கு குழி வெட்டும் தொழில் செய்துவரும் காமாட்சி குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வசிப்பதற்கு வீடு இல்லாமல் இடுகாட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், இடுகாட்டிலேயே விறகு அடுப்பில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

கல்லறைகளுக்கிடையே பல ஆண்டுக் காலமாக குழந்தைகளுடன் பயமின்றி வாழ்க்கை நடத்தும் குடும்பம்

இதுகுறித்து இக்குடும்பதினைச் சேர்ந்த பள்ளி மாணவி சௌமியா கூறுகையில்," அரசுப் பள்ளியில் ஒன்பதாவது படிக்கிறேன். எனது தாத்தா காலத்திலிருந்து இந்தச் சுடுகாட்டிலேயே வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளைகள் இந்த வளாகத்திலேயே விளையாடி வருகிறோம். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் எங்களுக்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடுகாடு முழுவதும் விளையாட்டு களம் தான் என்றார். சமூக அமைப்பு மூலம் எதேனும் உதவி கிடைத்தால் தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஏதுவாகும் என்று கோருகின்றனர் காமாட்சி குடும்பத்தினர்.

இதையும் படிங்க: குடியிருப்பு பகுதியில் சாரைப் பாம்புகள் களியாட்டம்!

Intro:புதுச்சேரியில் நகர வாழ்கை,மக்கள் வாழும் பகுதியில் கல்லறைகளுக்கிடையே பல ஆண்டு காலமாக குழந்தைகளுடன் சலிப்பில்லாமல் வாழ்க்கை நடத்தும் குடும்பம்


Body:புதுச்சேரி நகரப்பகுதியில் சுற்றிலும் செல்வந்தர்கள் வாழும் பகுதியான தென்னஞ் சாலை ரோடு இங்குள்ள செல்வந்தர்கள் இருக்கும் பகுதியில் இடுகாட்டு கல்லறைகளின் நடுவிலே குழந்தைகளுடன் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறது ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக குடும்பத்தினர் தங்குவதற்கு வீடுகள் இல்லை என்றும் அரசு வழங்கி வந்த உதவி பொருளைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறது அனைவருக்கும் வாழ்க்கை முடியும் பகுதியில் தான் இவர்களது வாழ்க்கை தொடங்குவதாக பல ஆண்டுகளாக தலைமுறையாக வாழ்ந்து வரும் காமாட்சி குடும்பத்தினர் தெரிவித்தனர் இந்த இடுகாட்டில் வரும் சடலங்களுக்கு குழி வெட்டுவது தான் இவர்களது தொழில் நாகரிகம் வளர்ந்து இந்த காலக்கட்டத்திலும் இன்றும் விறகு அடுப்பு அடுப்புகளை கொண்டு இடுகாட்டில் சமைத்து சாப்பிட்டு வருகிறது இந்த குடும்பம் ஏசி மின்விசிறி இல்ல ஆன நிம்மதியான தூக்கம் உண்டு.

கடந்த ஒரு தினங்களுக்கு முன்பு உடல் புதைக்கப்பட்ட சமாதி பூமாலை கூட வாடவில்லை இருந்தாலும் பயமின்றி மகிழ்ச்சியாக அங்கேயே விளையாடும் குழந்தைகள் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை

இதுகுறித்து காமாட்சியின் உறவினர் பள்ளி மாணவி சௌமியா கூறுகையில் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாவது படித்து வருவதாகவும் தாத்தா காலத்திலிருந்து நினைவு தெரிந்த முதல் இந்த சுடுகாடு பகுதியில் விளையாடி வளர்ந்து வருவதாகவும் இதுவரை இருக்க சொந்த வீடு இல்லை வாடகை வீடும் செல்வதற்கும் வசதிகள்இல்லை தனது அப்பா அம்மா தம்பி மாமா அனைவரும் இங்கே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார் எங்களுக்கு ஏக்கர் அளவில் அமைந்துள்ள இடுகாடு முழுவதும் விளையாட்டு களம் தான் என்ற அவர் இந்த சுடுகாட்டு பகுதிதான் தங்களுக்கு மழையில் வெயில் போன்ற இயற்கை நிகழ்வுகளின் போது தங்களை பாதுகாத்து அரவணைத்து உள்ளதாகவும் தெரிவித்தார் தங்களுக்கு சமூக அமைப்பு மூலம் உதவியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்




Conclusion:புதுச்சேரியில் நகர வாழ்கை,மக்கள் வாழும் பகுதியில் கல்லறைகளுக்கிடையே பல ஆண்டு காலமாக குழந்தைகளுடன் சலிப்பில்லாமல் வாழ்க்கை நடத்தும் குடும்பம்
Last Updated : Jan 6, 2020, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.