ETV Bharat / bharat

பார்வையற்றோர் மகிழட்டும்! - கண்தானம் செய்ய வலியுறுத்தும் ஓவிய கண்காட்சி

author img

By

Published : Sep 4, 2019, 11:41 AM IST

Updated : Sep 4, 2019, 11:53 AM IST

புதுச்சேரி: கண்தானத்தை வலியுறுத்தி கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருந்த தேசத் தலைவர்களின் ஓவியங்களை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.

தேசத் தலைவர்களின் ஓவியங்கள்

இந்தியாவின் தேசிய கண் கொடை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 8 வரை அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து 'கண்தானம் செய்வோம்' என்பதனை வலியுறுத்தி தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் வைத்துள்ளனர்.

ஓவியர்கள் பலர் ஒன்றுதிரண்டு வரைந்த அப்துல் கலாம், அன்னை தெரெசா, காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் ஓவியங்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கண்தானத்தை வலியுறுத்தி ஓவிய கண்காட்சி!

பனை ஓலை மட்டை, பழைய நெகிழி புட்டிகள், தென்னை ஓலை, வைக்கோல் உள்ளிட்டவைகளை கொண்டு வித்தியாசமான முறையில் தீட்டப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களின் மேல்பகுதியிலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் இந்த ஓவியங்களில் இருந்த ஆங்கில படம் ஹல்க் கதாநாயகன் ஓவியங்கள் சிறுவர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்தது.

இந்தியாவின் தேசிய கண் கொடை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 8 வரை அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து 'கண்தானம் செய்வோம்' என்பதனை வலியுறுத்தி தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் வைத்துள்ளனர்.

ஓவியர்கள் பலர் ஒன்றுதிரண்டு வரைந்த அப்துல் கலாம், அன்னை தெரெசா, காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் ஓவியங்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

கண்தானத்தை வலியுறுத்தி ஓவிய கண்காட்சி!

பனை ஓலை மட்டை, பழைய நெகிழி புட்டிகள், தென்னை ஓலை, வைக்கோல் உள்ளிட்டவைகளை கொண்டு வித்தியாசமான முறையில் தீட்டப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களின் மேல்பகுதியிலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் இந்த ஓவியங்களில் இருந்த ஆங்கில படம் ஹல்க் கதாநாயகன் ஓவியங்கள் சிறுவர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்தது.

Intro:புதுச் சேரியில் கண் தானத்தை வலியுறுத்தி தேசத் தலைவர்களின் ஓவியங்கள் பனை மட்டை ,தென்னை ஓலை ,வைக்கோல் உள்ளிட்டவைகளை கொண்டு கடற்கரை சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்


Body:இந்தியாவின் தேசிய கண் கொடை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 வரை முடிகிறது இக்காலகட்டத்தில் கண் கொடை சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், நடத்தப்படுவது பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஊக்கம் தரும் வகையிலும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது அந்த வகையில் இந்த ஆண்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சார்பிலும் தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் கண் தானம் செய்வோம் என்பதனை வலியுறுத்தி தேசிய தலைவர்கள் அப்துல் கலாம், அன்னை தெரசா, காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியர்கள் ஒன்றுதிரண்டு வரைந்து காட்சிப்பொருளாக கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் வைத்துள்ளனர் இந்த ஓவியங்கள் பனை ஓலை மட்டை பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் தென்னை ஓலை வைகோல் உள்ளிட்டவைகளை கொண்டு வித்தியாசம் முறையில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன ஒவ்வொரு ஓவியங்களின் மேல்பகுதியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன மேலும் இந்த ஓவியங்களில் ஆங்கில படம் ஹல்க் கதாநாயகன் ஓவியங்களும் சிறுவர்களை வெகுவாக கவர்ந்து ஈர்க்கப்பட்டனர் இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்


Conclusion:புதுச் சேரியில் கண் தானத்தை வலியுறுத்தி தேசத் தலைவர்களின் ஓவியங்கள் பனை மட்டை ,தென்னை ஓலை ,வைக்கோல் உள்ளிட்டவைகளை கொண்டு கடற்கரை சாலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்
Last Updated : Sep 4, 2019, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.