டெல்லி: பறவைக் காய்ச்சல் பதற்றம் வேண்டாம்; முட்டை, கறியை நன்கு சமைத்து உண்டால் போதும் என மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், அனைத்து மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து வந்த பறவைகளால்தான் இந்த வைரஸ் நம் நாட்டில் பரவியதாக தெரிகிறது. அதற்கு எதாவது காரணம் இருக்க வேண்டும்.மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம்; முட்டை, கறியை நன்கு சமைத்து உண்டால் போதும் என்றார்.
முன்னதாக பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களால் இயன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும்படி சுற்றுச்சுழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கான அமைச்சகம் தெரிவித்திருந்தது.