ETV Bharat / bharat

ஆயுதப் பூஜையில் பங்கேற்பு; சிக்கிம் செல்கிறார் ராஜ்நாத் சிங்? - ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம்

அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங், அங்கு நடைபெறும் நவராத்திரி ஆயுதப் பூஜையில் கலந்துகொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Rajnath Singh likely to visit Sikkim Shastra puja in Dusherra arms are worshipped annually in Dushehra ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் ஆயுத பூஜையில் கலந்துகொள்ள சிக்கிம் செல்கிறார் ராஜ்நாத் சிங்
Rajnath Singh likely to visit Sikkim Shastra puja in Dusherra arms are worshipped annually in Dushehra ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் ஆயுத பூஜையில் கலந்துகொள்ள சிக்கிம் செல்கிறார் ராஜ்நாத் சிங்
author img

By

Published : Oct 21, 2020, 3:31 PM IST

டெல்லி: இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 23ஆம் தேதி சிக்கிம் செல்கிறார்.

அங்கு நடக்கும் தசாரா விழாவில் சாஸ்திரா பூஜையில் (ஆயுதப் பூஜை) கலந்துகொள்கிறார். மேலும் அத்தினங்களில் பல்வேறு சாலை வசதி திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

நவராத்திரி விழாவில் சாஸ்திரா பூஜை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜைகள் செய்வார்கள். ஏற்கனவே ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்திருந்தார்.

இது அப்போது இரு வேறு கருத்துகளுக்கு வழிவகுத்தது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே மோதல் ஏப்ரல்-மே மாதங்களில் அதிகரித்தது. இதனால் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பாங்காங் தசோ ஏரியை ஆக்கிரமிக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். அதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி!

டெல்லி: இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 23ஆம் தேதி சிக்கிம் செல்கிறார்.

அங்கு நடக்கும் தசாரா விழாவில் சாஸ்திரா பூஜையில் (ஆயுதப் பூஜை) கலந்துகொள்கிறார். மேலும் அத்தினங்களில் பல்வேறு சாலை வசதி திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.

நவராத்திரி விழாவில் சாஸ்திரா பூஜை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜைகள் செய்வார்கள். ஏற்கனவே ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்திருந்தார்.

இது அப்போது இரு வேறு கருத்துகளுக்கு வழிவகுத்தது. இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையே மோதல் ஏப்ரல்-மே மாதங்களில் அதிகரித்தது. இதனால் வடகிழக்கு பகுதிகளில் சுமார் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பாங்காங் தசோ ஏரியை ஆக்கிரமிக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். அதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.