ETV Bharat / bharat

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினப் பெண் பாலியல் வன்புணர்வு - இருவர் கைது!

author img

By

Published : Oct 11, 2020, 3:33 PM IST

Updated : Oct 11, 2020, 5:58 PM IST

போபால்: வனப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்ணை, இருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mp
p

மத்தியப் பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு பேர் அப்பெண்ணுடன் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் ராஜ்புத் (27), பவார் சிங் ரத்தோர் (26) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். செளகான் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் ஒருவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு பேர் அப்பெண்ணுடன் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திர சிங் ராஜ்புத் (27), பவார் சிங் ரத்தோர் (26) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலின பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். செளகான் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 11, 2020, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.