டெல்லி பிரயாக்ராஜில் உள்ள துணை ராணுவப் படைகளின் குழு முகாமில் தங்கி பணிபுரிந்தவர் துணை ராணுவப் படை வீரர் வினோத் குமார் யாதவ். இவரது மனைவி விம்லா. இவர்களுக்கு 14 வயது மகன் சந்தீப், 12 வயது மகள் சிம்ரன் ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை வினோத் குமார் யாதவ் தனது துப்பாக்கியால் அவரது மனைவி, இரு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்றார். பின்னர் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ராணுவம், காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி தங்கை அவமதிப்பு...காவல்துறை மீது வருத்தம் தெரிவித்த ராணுவ படை வீரர்!