ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

author img

By

Published : Oct 29, 2020, 12:39 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 49 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 517 பேர் உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 881 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 517 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட்-19 தற்போதைய நிலவரம்:

இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 80 லட்சத்து 40 ஆயிரத்து 203 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 03 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 73 லட்சத்து 15 ஆயிரத்து 989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 527 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 75 ஆயிரத்து 760 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 10 கோடியே 65 லட்சத்து 63 ஆயிரத்து 440 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு நிதி: டெல்லி, ஸ்ரீநகர் பகுதிகளில் தொடரும் என்ஐஏ சோதனை!

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 881 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 517 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட்-19 தற்போதைய நிலவரம்:

இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 80 லட்சத்து 40 ஆயிரத்து 203 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 03 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 73 லட்சத்து 15 ஆயிரத்து 989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 527 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 75 ஆயிரத்து 760 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 10 கோடியே 65 லட்சத்து 63 ஆயிரத்து 440 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு நிதி: டெல்லி, ஸ்ரீநகர் பகுதிகளில் தொடரும் என்ஐஏ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.