ETV Bharat / bharat

கோவிட் - 19: ஒரே நாளில் 81 ஆயிரம் பேர் பாதிப்பு - கரோனா பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்தைத் நெருங்கியுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 484 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்தைத் நெருங்கியுள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : Oct 2, 2020, 12:27 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 81 ஆயிரத்து 484 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 095 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 63 லட்சத்து 94 ஆயிரத்து 68 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 42 ஆயிரத்து 217 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 53 லட்சத்து 52 ஆயிரத்து 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 99 ஆயிரத்து 773 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 97 ஆயிரத்து 947 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 7 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 728 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 81 ஆயிரத்து 484 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 095 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 63 லட்சத்து 94 ஆயிரத்து 68 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 42 ஆயிரத்து 217 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 53 லட்சத்து 52 ஆயிரத்து 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 99 ஆயிரத்து 773 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (அக். 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 97 ஆயிரத்து 947 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 7 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 728 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.