ETV Bharat / bharat

கரோனா நோயாளிகளுக்கு உதவ கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்!

author img

By

Published : Mar 22, 2020, 10:39 PM IST

டெல்லி: கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Coronavcoronavirus  COVID-19  Medical robots  felix hospital  கரோனா நோயாளிகளுக்கு உதவ கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்!  கரோனா பாதிப்பு, கரோனா சுகாதாரப் பணியில் ரோபோ, கரோனா ஃபைட்டர் ரோபோ  நொய்டா பெலிக்ஸ் மருத்துவமனை  Coronavirus: Robot to help patients and medical staff in Noida  Robot to help Coronavirus patientsirus
Coronaviruscoronavirus COVID-19 Medical robots felix hospital கரோனா நோயாளிகளுக்கு உதவ கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்! கரோனா பாதிப்பு, கரோனா சுகாதாரப் பணியில் ரோபோ, கரோனா ஃபைட்டர் ரோபோ நொய்டா பெலிக்ஸ் மருத்துவமனை Coronavirus: Robot to help patients and medical staff in Noida Robot to help Coronavirus patients

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 137இல் உள்ள பெலிக்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ, கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மருத்து துறையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த ரோபோ நேற்று (மார்ச்21) அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து பெலிக்ஸ் மருத்துவமனையின் டாக்டர் டி.கே. குப்தா கூறுகையில், “நாட்டில் மருத்துவத் துறையில் போதுமான பயிற்சி பெற்ற மனித சக்தி இல்லை.

கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த கோவிட் வைரஸ் தாக்குதலை தடுக்க அதிக அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தேவைப்படுவார்கள். அப்போது மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பிற மருத்துவ ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

இந்நிலையில் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு எதிரான சிகிச்சைக்கு ரோபோக்களை பயன்படுத்தினால் வைரஸ் பரவுதல் வாய்ப்பு மிக குறைவு. செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் சிக்கலான நோயாளிகளுக்கு கவனம் செலுத்த முடியும்.

இந்த வகை ரோபோக்கள் மருத்துவர்களுக்கு வலது கை ஆக செயல்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோ நோயாளிகளுக்கு மருந்துகள், உணவு, பிற நுகர்பொருட்களை வழங்குவதற்கும், அகற்றப்படும் கழிவுகளை சேகரிப்பதற்கும், நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையில் தொடர்பு கொள்ளும் ஒரு சேனலாக செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி கோவிட் ஃபைட்டர் ரோபோ கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நெரிசலான இடத்தில் ஸ்கேன் செய்ய ரோந்து செல்ல முடியும். கூடுதலாக, கோவிட் ஃபைட்டர் தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளின் புற ஊதா கருத்தடை செய்ய முடியும்.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோவைப் செவிலியர்களும், பிற மருத்துவ ஊழியர்களும் பயன்படுத்துவார்கள். எங்களிடம் தற்போது மூன்று ரோபோக்கள் தயாராக உள்ளன.

கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்

அவைகளை உத்தரபிரதேச அரசுக்கு விலையில்லாமல் வழங்க விரும்புகிறோம்.

தேவைப்பட்டால் இதுபோன்ற 30 ரோபோக்களுடன் நாங்கள் மாநில முதலமைச்சரை சந்திப்போம். பெலிக்ஸ் மருத்துவமனை எப்போதும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறது. இந்தப் பணியில் உறுதியாக இருப்போம்” என்றார்.

இதையும் படிங்க: சுயநலமின்றி சேவையாற்றுபவர்களுக்கு கரவோசை எழுப்பும் மக்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 137இல் உள்ள பெலிக்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ, கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மருத்து துறையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இந்த ரோபோ நேற்று (மார்ச்21) அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்து பெலிக்ஸ் மருத்துவமனையின் டாக்டர் டி.கே. குப்தா கூறுகையில், “நாட்டில் மருத்துவத் துறையில் போதுமான பயிற்சி பெற்ற மனித சக்தி இல்லை.

கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இந்த கோவிட் வைரஸ் தாக்குதலை தடுக்க அதிக அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தேவைப்படுவார்கள். அப்போது மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பிற மருத்துவ ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

இந்நிலையில் கோவிட் வைரஸ் தாக்குதலுக்கு எதிரான சிகிச்சைக்கு ரோபோக்களை பயன்படுத்தினால் வைரஸ் பரவுதல் வாய்ப்பு மிக குறைவு. செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் சிக்கலான நோயாளிகளுக்கு கவனம் செலுத்த முடியும்.

இந்த வகை ரோபோக்கள் மருத்துவர்களுக்கு வலது கை ஆக செயல்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள ரோபோ நோயாளிகளுக்கு மருந்துகள், உணவு, பிற நுகர்பொருட்களை வழங்குவதற்கும், அகற்றப்படும் கழிவுகளை சேகரிப்பதற்கும், நோயாளிகளுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையில் தொடர்பு கொள்ளும் ஒரு சேனலாக செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி கோவிட் ஃபைட்டர் ரோபோ கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நெரிசலான இடத்தில் ஸ்கேன் செய்ய ரோந்து செல்ல முடியும். கூடுதலாக, கோவிட் ஃபைட்டர் தனிமைப்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளின் புற ஊதா கருத்தடை செய்ய முடியும்.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோவைப் செவிலியர்களும், பிற மருத்துவ ஊழியர்களும் பயன்படுத்துவார்கள். எங்களிடம் தற்போது மூன்று ரோபோக்கள் தயாராக உள்ளன.

கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்

அவைகளை உத்தரபிரதேச அரசுக்கு விலையில்லாமல் வழங்க விரும்புகிறோம்.

தேவைப்பட்டால் இதுபோன்ற 30 ரோபோக்களுடன் நாங்கள் மாநில முதலமைச்சரை சந்திப்போம். பெலிக்ஸ் மருத்துவமனை எப்போதும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறது. இந்தப் பணியில் உறுதியாக இருப்போம்” என்றார்.

இதையும் படிங்க: சுயநலமின்றி சேவையாற்றுபவர்களுக்கு கரவோசை எழுப்பும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.