ETV Bharat / bharat

'மோடி ஐயா, மோடி ஐயா சோறு போடய்யா' - குழந்தைகளின் குரல்களுக்கு செவிசாய்ப்பாரா பிரதமர்? - புதுச்சேரி குழந்தைகளிடன் பாடல்

புதுச்சேரி: “மோடி ஐயா, மோடி ஐயா புதுச்சேரிக்கு நிதி கொடுங்க!” என்று பாடல் பாடி புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி குழந்தைகள் பாடிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

children sings and requested to PM Modi fund to fights corona
children sings and requested to PM Modi fund to fights corona
author img

By

Published : Apr 13, 2020, 11:28 AM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிளாளிகள் பலர் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதற்காக கரோனா நிவாரண நிதி உதவி புதுச்சேரியில் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் 300 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனை நாராயணசாமியே தெளிவுபடுத்தியிருந்தார்.

குழந்தைகளின் குரல்கள்

தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் பாட்டு பாடி வீடியோ வெளியிட்டு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "மோடி ஐயா, மோடி ஐயா எங்களுக்கு நிதி கொடுங்க", "நாங்களும் உங்க பிள்ளதாங்க எங்களுக்கும் நிதி வழங்குங்க பிரதமர் ஐயா", "சோறு போடுய்யா" என்று அழகிய குரலுடன் அக்குழந்தைகள் பாட்டு பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மாநில முதலமைச்சர் குரலுக்கு செவிசாய்க்காத பிரதமர் குழந்தைகளின் குரல்களைக் கேட்டு நிதி வழங்குவாரா என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிளாளிகள் பலர் வேலையிழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதற்காக கரோனா நிவாரண நிதி உதவி புதுச்சேரியில் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசிடம் 300 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனை நாராயணசாமியே தெளிவுபடுத்தியிருந்தார்.

குழந்தைகளின் குரல்கள்

தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் பாட்டு பாடி வீடியோ வெளியிட்டு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "மோடி ஐயா, மோடி ஐயா எங்களுக்கு நிதி கொடுங்க", "நாங்களும் உங்க பிள்ளதாங்க எங்களுக்கும் நிதி வழங்குங்க பிரதமர் ஐயா", "சோறு போடுய்யா" என்று அழகிய குரலுடன் அக்குழந்தைகள் பாட்டு பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மாநில முதலமைச்சர் குரலுக்கு செவிசாய்க்காத பிரதமர் குழந்தைகளின் குரல்களைக் கேட்டு நிதி வழங்குவாரா என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.