புதுச்சேரி மாநிலம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கண்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு கிளை நூலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தனர்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ' புதுச்சேரி மாநிலம் மனிதவள மேம்பாடு, மருத்துவம் உள்ளிட்ட நான்கு இடங்களில் யூனியன் பிரதேசங்களில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல் பாரதிய ஜனதா அரசு வளர்ச்சி 4.5 % என்றால் புதுச்சேரி மாநில வளர்ச்சி 11.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது ' என்று பெருமைபடக் கூறினார்.