ETV Bharat / bharat

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இளம் வீரர்!

ராய்ப்பூர் : இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவத்தினர் 20 பேரில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் கணேஷ் குன்ஜமும் ஒருவர்.

author img

By

Published : Jun 17, 2020, 8:47 PM IST

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இளம் வீரர்!
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இளம் வீரர்!

ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த 50 ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ மோதலாகும். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா - சீனா இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குன்ஜும் 2011ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். இவர், இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், தனது மகன் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்ததாக வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறிய அவரது பெற்றோர், நாட்டிற்காக தங்களது மகன் உயிர் தியாகம் செய்திருப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்தனர்.

கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு சீன மக்கள் விடுதலை ராணுவம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த 50 ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ மோதலாகும். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா - சீனா இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குன்ஜும் 2011ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர். இவர், இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், தனது மகன் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்ததாக வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறிய அவரது பெற்றோர், நாட்டிற்காக தங்களது மகன் உயிர் தியாகம் செய்திருப்பது பெருமை அளிப்பதாக தெரிவித்தனர்.

கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு சீன மக்கள் விடுதலை ராணுவம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.