ETV Bharat / bharat

’ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்’ - எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் திட்டவட்டம்

author img

By

Published : Jun 19, 2020, 12:56 PM IST

ஜெய்ப்பூர் : இந்திய எல்லைப் பகுதியில் ஏதேனும் அத்து மீறல்கள் நடந்தால் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்போம் என ராஜஸ்தான் மாநிலத்தின் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

border-residents-in-rajasthan-ready-to-guard-indo-pakistan-border-if-situation-arises
border-residents-in-rajasthan-ready-to-guard-indo-pakistan-border-if-situation-arises

கடந்த சில நாள்களாக இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மேற்கு பகுதிகளில் பாகிஸ்தானுடன் தங்களது எல்லைப் பகுதிகளை பகிர்ந்துள்ள மக்களின் மனநிலை குறித்து அறிவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் நமது ஈடிவி பாரத் சார்பாக பேட்டி காணப்பட்டனர்.

இரு நாடுகளின் உறவுமுறை குறித்து அப்பகுதி மக்களின் எண்ண ஓட்டம், கருத்துக்கள் பின்வருமாறு :

ஜெய்சல்மர் :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - பாகிஸ்தானின் சர்வதேச எல்லையைக் கொண்டுள்ள கிர்த்துவாலா கிராம மக்கள் கூறுகையில், ”நாங்கள் 35 முதல் 40 கி.மீ வரை பாகிஸ்தானுடன் எங்களது எல்லைகளைப் பகிர்ந்துள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள்ளே உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடலாம்” என்றனர்.

80 வயதான பகவான் சிங் நம்மிடம் பேசுகையில், ”1965, 1971ஆம் ஆண்டுகளில் எல்லைகளில் நிலமை மிகவும் மோசமான நிலையில், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட எந்த வழிகளும் இல்லாத சூழல் நிலவியது. அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீரை சேகரித்து ஒட்டகங்களின் உதவியுடன் அனுப்பி வைத்தோம்” என நினைவுகள் ததும்ப கூறினார். தற்போதும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் எந்த வகையிலேனும் உதவத் தயாராக இருப்போம் எனத் தெரிவித்தார்.

பர்மர் :

பர்மர் மாவட்டம், தம்லோர் கிராம மக்கள், நாள் ஒன்றுக்கு 50 டிகிரி செல்சியஸ் வரை அங்கு வெப்பம் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் நாட்டுக்காக போராடும் வீர உள்ளங்கள்தான் தங்களைப் பாதுகாத்து வருகின்றனர் எனவும் கூறினர்.

ஸ்ரீ கங்காநகர்

இந்தியா - பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையுடனே உள்ளனர். அவர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக உள்ளனர்.

இந்துமல்கோட் எல்லையின் சமீபத்திய நிலை குறித்து பேசுகையில், ”தற்போது வரை பாகிஸ்தானின் தரப்பிலிருந்து எந்தவொரு அசம்பாவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ராணுவத்தினர் கிராம மக்களின் உதவியைக் கோரினால், எப்போதும் உதவத் தயாராகவே உள்ளோம். பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து எதிரிகளை தோற்கடிக்க ராஜஸ்தான் பொது மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்” என ஸ்ரீ கங்காநகர் கிராம மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.

பிகாநேர்

இந்தியாவின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பிகாநேர் மாவட்டம், கஜுவாலா கிராமத்தினரை சந்தித்தோம். அந்த கிராமம் பிகானேர் பகுதியில் பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, பெரும்பாலான மக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை ஆகிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு நோக்கில் இந்தப் பகுதியில் பல கட்டுப்பாடுகள் இருப்பினும் இங்குள்ள மக்கள் திருப்திகரமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

இங்கு வசிக்கும் நரேந்திர சரேலியா என்பவர் பேசுகையில், ”இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை. பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால், வெளியேற்றும் வழிமுறைகள் உடனடியாக பின்பற்றப்படும், தேவைப்பட்டால் நாங்கள் நாட்டிற்காக எல்லைகளுக்கு சென்று போராடத் தயாராக உள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணங்களை ஒட்டியுள்ள 1,048 கி.மீ எல்லையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 8 மாநிலங்கள், 19 இடங்கள், வெல்லப்போவது யாரு? மல்லுக்கட்டும் காங்கிரஸ், பாஜக!

கடந்த சில நாள்களாக இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மேற்கு பகுதிகளில் பாகிஸ்தானுடன் தங்களது எல்லைப் பகுதிகளை பகிர்ந்துள்ள மக்களின் மனநிலை குறித்து அறிவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் நமது ஈடிவி பாரத் சார்பாக பேட்டி காணப்பட்டனர்.

இரு நாடுகளின் உறவுமுறை குறித்து அப்பகுதி மக்களின் எண்ண ஓட்டம், கருத்துக்கள் பின்வருமாறு :

ஜெய்சல்மர் :

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - பாகிஸ்தானின் சர்வதேச எல்லையைக் கொண்டுள்ள கிர்த்துவாலா கிராம மக்கள் கூறுகையில், ”நாங்கள் 35 முதல் 40 கி.மீ வரை பாகிஸ்தானுடன் எங்களது எல்லைகளைப் பகிர்ந்துள்ளோம். தற்போது நிலைமை கட்டுக்குள்ளே உள்ளது. ஆனால் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடலாம்” என்றனர்.

80 வயதான பகவான் சிங் நம்மிடம் பேசுகையில், ”1965, 1971ஆம் ஆண்டுகளில் எல்லைகளில் நிலமை மிகவும் மோசமான நிலையில், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூட எந்த வழிகளும் இல்லாத சூழல் நிலவியது. அப்போது, கிணற்றில் இருந்த தண்ணீரை சேகரித்து ஒட்டகங்களின் உதவியுடன் அனுப்பி வைத்தோம்” என நினைவுகள் ததும்ப கூறினார். தற்போதும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் எந்த வகையிலேனும் உதவத் தயாராக இருப்போம் எனத் தெரிவித்தார்.

பர்மர் :

பர்மர் மாவட்டம், தம்லோர் கிராம மக்கள், நாள் ஒன்றுக்கு 50 டிகிரி செல்சியஸ் வரை அங்கு வெப்பம் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் நாட்டுக்காக போராடும் வீர உள்ளங்கள்தான் தங்களைப் பாதுகாத்து வருகின்றனர் எனவும் கூறினர்.

ஸ்ரீ கங்காநகர்

இந்தியா - பாக்கிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையுடனே உள்ளனர். அவர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக உள்ளனர்.

இந்துமல்கோட் எல்லையின் சமீபத்திய நிலை குறித்து பேசுகையில், ”தற்போது வரை பாகிஸ்தானின் தரப்பிலிருந்து எந்தவொரு அசம்பாவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ராணுவத்தினர் கிராம மக்களின் உதவியைக் கோரினால், எப்போதும் உதவத் தயாராகவே உள்ளோம். பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து எதிரிகளை தோற்கடிக்க ராஜஸ்தான் பொது மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்” என ஸ்ரீ கங்காநகர் கிராம மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்தனர்.

பிகாநேர்

இந்தியாவின் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பிகாநேர் மாவட்டம், கஜுவாலா கிராமத்தினரை சந்தித்தோம். அந்த கிராமம் பிகானேர் பகுதியில் பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, பெரும்பாலான மக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை ஆகிய வேலைகளில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு நோக்கில் இந்தப் பகுதியில் பல கட்டுப்பாடுகள் இருப்பினும் இங்குள்ள மக்கள் திருப்திகரமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

இங்கு வசிக்கும் நரேந்திர சரேலியா என்பவர் பேசுகையில், ”இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை. பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால், வெளியேற்றும் வழிமுறைகள் உடனடியாக பின்பற்றப்படும், தேவைப்பட்டால் நாங்கள் நாட்டிற்காக எல்லைகளுக்கு சென்று போராடத் தயாராக உள்ளோம்” என்றார்.

ராஜஸ்தான் மாநிலம், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணங்களை ஒட்டியுள்ள 1,048 கி.மீ எல்லையை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 8 மாநிலங்கள், 19 இடங்கள், வெல்லப்போவது யாரு? மல்லுக்கட்டும் காங்கிரஸ், பாஜக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.