ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு காசிகுண்ட் பகுதியின் பாஜக கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரான (சர்பஞ்ச்) சஜாத் அஹ்மத் காண்டே இன்று (ஆக.6) அவரது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது பயங்கரவாதிகள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் காண்டே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் பாஜக பஞ்சாயத்து தலைவர்கள் மீது இரண்டாவது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏற்கனவே நேற்றைய முன்தினம் (ஆக. 4) குல்கம் மாவட்டத்தின் அக்ரான் கிராமத்தின் சர்பஞ்ச் ஆரிஃப் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த ஆரிஃப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், அக்ரான் சர்பஞ்ச் ஆரிஃப் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனையடுத்து அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு கழுத்தியில் காயம் ஏற்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் படிங்க....'ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதே கனவு' - துணைநிலை ஆளுநர் பேச்சு