ETV Bharat / bharat

இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒலிம்பிக் நாயகன்! - ஹரியானா இடைத்தேர்தல்

சண்டிகர் : பரோடா தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிரபல மல்யுத்த வீரரான யோகேஷ்வர் தத் களமிறங்குகிறார்.

BJP names Yogeshwar Dutt as party candidate
BJP names Yogeshwar Dutt as party candidate
author img

By

Published : Oct 16, 2020, 3:21 PM IST

ஹரியானா மாநிலத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை பாஜகவால் பெற முடியவில்லை என்றாலும், 40 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.

அதைத்தொடர்ந்து ஜன்னாயக் ஜந்தா கட்சி மற்றும் ஏழு சுயட்சை எம்எல்ஏகள் ஆகியோருடன் பாஜக ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்திலுள்ள பரோடா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ கிருஷ்ணா ஹூடா என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.

இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பரோடா தொகுதியில் பாஜக சார்பில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் போட்டியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் யோகேஷ்வர் தத் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ கிருஷ்ணா ஹூடாவிடம் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலம், சோனிபட் அருகேவுள்ள பைன்ஸ்வால் கலான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர் தத். அவர் லண்டனில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

2013ஆம் ஆண்டு பதம் ஸ்ரீ விருது பெற்ற இவர், ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.

இதையும் படிங்க: கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் காந்தி

ஹரியானா மாநிலத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சியமைக்கத் தேவையான 46 இடங்களை பாஜகவால் பெற முடியவில்லை என்றாலும், 40 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.

அதைத்தொடர்ந்து ஜன்னாயக் ஜந்தா கட்சி மற்றும் ஏழு சுயட்சை எம்எல்ஏகள் ஆகியோருடன் பாஜக ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்திலுள்ள பரோடா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ கிருஷ்ணா ஹூடா என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.

இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பரோடா தொகுதியில் பாஜக சார்பில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் போட்டியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் யோகேஷ்வர் தத் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீ கிருஷ்ணா ஹூடாவிடம் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலம், சோனிபட் அருகேவுள்ள பைன்ஸ்வால் கலான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர் தத். அவர் லண்டனில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மேலும், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

2013ஆம் ஆண்டு பதம் ஸ்ரீ விருது பெற்ற இவர், ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.

இதையும் படிங்க: கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.