ETV Bharat / bharat

எங்கே சென்றீர்கள் மம்தா பானர்ஜி? பாஜக கேள்வி

author img

By

Published : May 12, 2020, 8:37 AM IST

டெல்லி: மேற்கு வங்க மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கே சென்றீர்கள் மம்தா பானர்ஜி என பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வியெழுப்பியுள்ளார்.

Mamata Banerjee  coronavirus  Kailash Vijayvargiya  Mamata hid numbers on coronavirus  Mamata misled people  BJP slams Mamata on virus crisis  கரோனா வைரஸ் தகவல்கள் மறைப்பு  மம்தா பானர்ஜி மீது பாஜக குற்றச்சாட்டு  மேற்கு வங்காளம்  பாஜக  திரிணாமுல் காங்கிரஸ்
Mamata Banerjee coronavirus Kailash Vijayvargiya Mamata hid numbers on coronavirus Mamata misled people BJP slams Mamata on virus crisis கரோனா வைரஸ் தகவல்கள் மறைப்பு மம்தா பானர்ஜி மீது பாஜக குற்றச்சாட்டு மேற்கு வங்காளம் பாஜக திரிணாமுல் காங்கிரஸ்

டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “மேற்கு வங்கம் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மம்தா பானர்ஜி மறைத்து விட்டார்.

தற்போது எங்கே இருக்கிறீர்கள் பானர்ஜி? நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வெளிமாநிலத்தில் உள்ள வங்காளத் தொழிலாளர்கள் உங்களின் உதவியை எதிர்நோக்குகிறார்கள்” என்றார்.

மேலும், “கரோனா பாதிப்பாளர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் தகவல்களை மம்தா பானர்ஜி மறைத்துவிட்டார்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் அதிகாரத்தை மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துகிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டிள்ள நிலையில், மத்திய அரசின் நிர்வாக இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் பதில் புகாரளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸூக்கு 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 185 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஹாண்ட்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன்!

டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “மேற்கு வங்கம் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மம்தா பானர்ஜி மறைத்து விட்டார்.

தற்போது எங்கே இருக்கிறீர்கள் பானர்ஜி? நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வெளிமாநிலத்தில் உள்ள வங்காளத் தொழிலாளர்கள் உங்களின் உதவியை எதிர்நோக்குகிறார்கள்” என்றார்.

மேலும், “கரோனா பாதிப்பாளர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் தகவல்களை மம்தா பானர்ஜி மறைத்துவிட்டார்” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் அதிகாரத்தை மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துகிறார் என்று பாஜக குற்றஞ்சாட்டிள்ள நிலையில், மத்திய அரசின் நிர்வாக இயந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் பதில் புகாரளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸூக்கு 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 185 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா வைரஸ் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: ஹாண்ட்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.