ETV Bharat / bharat

கன்னியாஸ்திரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய பிராங்கோ மனு நிராகரிப்பு!

author img

By

Published : Mar 16, 2020, 7:33 PM IST

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி அளித்த பாலியல் புகாரிலிருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் பாதிரியார் ஃபிராங்கோவின் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Bishop Mulakkal sexual abuse case  Bishop Mulakkal plea dismissed  nun sexual abuse case  Bishop Franco Mulakkal sexual case of nun  Bishop Franco Mulakkal plea dismissed  கேரள அருட்சகோதரி பாலியல் வன்புணர்வு  ஃபிராங்கோ முல்லக்கல் வழக்கு, விசாரணை நீதிமன்றம், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனு, நிராகரிப்பு, பாலியல் வன்புணர்வு
Bishop Mulakkal sexual abuse case Bishop Mulakkal plea dismissed nun sexual abuse case Bishop Franco Mulakkal sexual case of nun Bishop Franco Mulakkal plea dismissed கேரள அருட்சகோதரி பாலியல் வன்புணர்வு ஃபிராங்கோ முல்லக்கல் வழக்கு, விசாரணை நீதிமன்றம், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனு, நிராகரிப்பு, பாலியல் வன்புணர்வு

கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல். இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர், 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஃபிராங்கோவால் 2014-16ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து ஃபிராங்கோ 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு கோட்டயம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த வழக்கிலிருந்து ஃபிராங்கோவை விடுவிக்கக்கோரி, அவரது வழக்குரைஞர் விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தை நாட போவதாக வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஃபிராங்கோ மீது சட்டவிரோத தடுப்புக்காவல், பாலியல் வன்புணர்வு, இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதே பிஷப்... புகார் புதுசு!

கேரள மாநிலம் கொச்சி ஜலந்தர் முன்னாள் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல். இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர், 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஃபிராங்கோவால் 2014-16ஆம் ஆண்டுகளில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின்பேரில் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் வன்புணர்வு வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து ஃபிராங்கோ 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு கோட்டயம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த வழக்கிலிருந்து ஃபிராங்கோவை விடுவிக்கக்கோரி, அவரது வழக்குரைஞர் விசாரணை நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தை நாட போவதாக வழக்குரைஞர் தெரிவித்தார்.

ஃபிராங்கோ மீது சட்டவிரோத தடுப்புக்காவல், பாலியல் வன்புணர்வு, இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு மற்றும் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதே பிஷப்... புகார் புதுசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.