ETV Bharat / bharat

நெருங்கும் பிகார் தேர்தல் - அனல் பறக்கும் களம்!

author img

By

Published : Sep 17, 2020, 9:09 PM IST

பாட்னா: பிகாரில் உள்ள அரசியல் கட்சிகள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்ற நிலையில், கரோனா பரவலின் மத்தியிலும் தேர்தல் உற்சாகம் அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

RJD
RJD

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மாநில அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநிலத்தின் மேம்பாடுகள், கரோனா வைரஸ் பரவலைக் கையாளுதல், வெள்ளம், வேலைவாய்ப்பு, இன்ன பிற காரணிகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில், மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் உள்ள பிகார் பூர்வீக மக்களுக்கு 90 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரியுள்ளார். கரோனா வைரஸைக் கையாளுதல், வடக்கு பிகாரில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக லோக்சக்தி ஜான் கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் சாவான், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான நிதீஷ் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மேலும், பிகாரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து விபரம், குற்றவியல் பின்னணி ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அதிகபட்ச குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் (பிஜேபி) உள்ளன.

ஆர்.ஜே.டி தலைவர்களில் 41 விழுக்காடு உறுப்பினர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். காங்கிரஸில் 40 விழுக்காடு தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) மற்றும் பாஜகவில் முறையே 37, 35 விழுக்காடு தலைவர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் குற்ற பின்னணி
பிகார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு விவரம்

இந்த அறிக்கை 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கல்வி விபரம்
பிகார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி

மேலும் இந்த அறிக்கையின்படி, 240 எம்.எல்.ஏ.க்களில் 67 விழுக்காடு பேர் கோடீஸ்வரர்கள். ககாரியாவைச் சேர்ந்த ஜே.டி.யூ சட்டப்பேரவை உறுப்பினர் மொத்த சொத்துக்களில் 41 கோடி ரூபாயுடன் பிகார் சட்டப்பேரவையின் பணக்கார உறுப்பினராக உள்ளார். பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அஜித் ஷர்மா 40 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.

மொத்தம் உள்ள 240 எம்எல்ஏக்களில் 134 பேர் முதுகலைப் பட்டதாரிகள், 96 பேர் இளங்கலைப் பட்டதாரிகள், ஒன்பது எம்எல்ஏக்கள் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மாநில அரசியல் கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநிலத்தின் மேம்பாடுகள், கரோனா வைரஸ் பரவலைக் கையாளுதல், வெள்ளம், வேலைவாய்ப்பு, இன்ன பிற காரணிகள் குறித்து அனல் பறக்கும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில், மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் உள்ள பிகார் பூர்வீக மக்களுக்கு 90 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரியுள்ளார். கரோனா வைரஸைக் கையாளுதல், வடக்கு பிகாரில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக லோக்சக்தி ஜான் கட்சி (எல்ஜேபி) தலைவர் சிராக் சாவான், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான நிதீஷ் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மேலும், பிகாரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து விபரம், குற்றவியல் பின்னணி ஆகியவற்றைத் தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அதிகபட்ச குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் (பிஜேபி) உள்ளன.

ஆர்.ஜே.டி தலைவர்களில் 41 விழுக்காடு உறுப்பினர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். காங்கிரஸில் 40 விழுக்காடு தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு) மற்றும் பாஜகவில் முறையே 37, 35 விழுக்காடு தலைவர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் குற்ற பின்னணி
பிகார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் சொத்து மதிப்பு விவரம்

இந்த அறிக்கை 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கல்வி விபரம்
பிகார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி

மேலும் இந்த அறிக்கையின்படி, 240 எம்.எல்.ஏ.க்களில் 67 விழுக்காடு பேர் கோடீஸ்வரர்கள். ககாரியாவைச் சேர்ந்த ஜே.டி.யூ சட்டப்பேரவை உறுப்பினர் மொத்த சொத்துக்களில் 41 கோடி ரூபாயுடன் பிகார் சட்டப்பேரவையின் பணக்கார உறுப்பினராக உள்ளார். பாகல்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அஜித் ஷர்மா 40 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.

மொத்தம் உள்ள 240 எம்எல்ஏக்களில் 134 பேர் முதுகலைப் பட்டதாரிகள், 96 பேர் இளங்கலைப் பட்டதாரிகள், ஒன்பது எம்எல்ஏக்கள் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.