ETV Bharat / bharat

என்.ஆர்.சி.இல் உள்ள தகுதியற்ற நபர்களைக் கண்டறிய உத்தரவு

author img

By

Published : Feb 22, 2020, 12:01 PM IST

திஸ்பூர்: என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறியுமாறு என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் ஹித்தேஷ் தேவ் சர்மா, அஸ்ஸாம் மாவட்ட பதிவேட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

assam nrc, அஸ்ஸாம் என்ஆர்சி, தேசிய குடிமக்கள் பதிவேடு
assam nrc

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்த வெளியேற்றும்வகையில், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (1951) புதுப்பிக்கமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, அம்மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி என்.ஆர்.சி.இன் இறுதிப் பட்டியல் வெளியானது. இதில், மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் விடுபட்டுள்ளனர்.

இதில், உண்மையான இந்தியர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து, இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறியுமாறு என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் ஹித்தேஷ் தேவ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குடிமக்கள் பதிவேடு பதிவாளர்களுக்கு அவர் எழுதியுள்ள சுற்றறிக்கையில், "2019 ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலில் தகுதியற்ற சில நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமானவை. இந்திய தலைமைப் பதிவேட்டாளரிடம் இது ஒப்படைக்கப்படவுள்ளது" எனக் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள், வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள், தேசிய குடியுரிமை தீர்ப்பாயத்தில் (Foreigners Tribunal) வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஆகியோரும், அவர்களின் சந்ததியினரும் தகுதியற்ற நபர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச நீதித்துறை மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வங்கதேசத்தைச் சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடித்த வெளியேற்றும்வகையில், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (1951) புதுப்பிக்கமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, அம்மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி என்.ஆர்.சி.இன் இறுதிப் பட்டியல் வெளியானது. இதில், மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, 19 லட்சத்து ஆறாயிரத்து 657 பேர் விடுபட்டுள்ளனர்.

இதில், உண்மையான இந்தியர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் எழுந்த புகாரையடுத்து, இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறியுமாறு என்.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளர் ஹித்தேஷ் தேவ் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குடிமக்கள் பதிவேடு பதிவாளர்களுக்கு அவர் எழுதியுள்ள சுற்றறிக்கையில், "2019 ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட என்.ஆர்.சி. இறுதிப் பட்டியலில் தகுதியற்ற சில நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியற்ற நபர்களின் விவரங்களைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தரவுகள் மிகவும் முக்கியமானவை. இந்திய தலைமைப் பதிவேட்டாளரிடம் இது ஒப்படைக்கப்படவுள்ளது" எனக் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள், வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள், தேசிய குடியுரிமை தீர்ப்பாயத்தில் (Foreigners Tribunal) வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் ஆகியோரும், அவர்களின் சந்ததியினரும் தகுதியற்ற நபர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச நீதித்துறை மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.