ETV Bharat / bharat

நகரங்களைவிட கிராமங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்!

author img

By

Published : Sep 4, 2020, 12:52 PM IST

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கோவிட்-19 நகர்புறங்களைவிட கிராம புறங்களில் அதிவேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Andhra Pradesh: Villages record highest spike in COVID-19 cases
Andhra Pradesh: Villages record highest spike in COVID-19 cases

இந்தியாவில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்போதும், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிராவுக்குப் பின் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது.

குறிப்பாக, தற்போது ஆந்திராவில் நகர் பகுதிகளைவிட கிராமப்புறங்களிலேயே கரோனா வேகமாக பரவிவருகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 52 விழுக்காட்டினர் நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள். அதேநேரம், ஆகஸ்ட் 23-29ஆம் தேதி வரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 48 விழுக்காட்டினர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பிரகாசம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், நெல்லூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து நிலைமை மோசமாகிவருகின்றது. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மட்டும் ஆந்திராவில், 597 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அவ்வாறான உயிரிழிப்பு விகிதமும் நகர்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை 3,45,216 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை மட்டும் புதிதாக 1,10,315 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களாக, தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆந்திராவில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா (24,000 பேர்), தமிழ்நாடு (7332 பேர்) கர்நாடகா (5,702 பேர்) டெல்லி (4,444 பேர்) ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திராவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவிட்-19, இதே வேகத்தில் ஆந்திராவில் பரவினால், விரைவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியைவிட அதிகரிக்கக்கூடும் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா மற்ற நோய்களுடன் இணைந்தால் ஆபத்தா... மருத்துவர் பதில்!

இந்தியாவில் கோவிட்-19 பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்போதும், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. மகாராஷ்டிராவுக்குப் பின் கோவிட்-19 தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக ஆந்திர பிரதேசம் உள்ளது.

குறிப்பாக, தற்போது ஆந்திராவில் நகர் பகுதிகளைவிட கிராமப்புறங்களிலேயே கரோனா வேகமாக பரவிவருகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 52 விழுக்காட்டினர் நகர்புறங்களைச் சேர்ந்தவர்கள். அதேநேரம், ஆகஸ்ட் 23-29ஆம் தேதி வரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 48 விழுக்காட்டினர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, பிரகாசம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், நெல்லூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து நிலைமை மோசமாகிவருகின்றது. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் மட்டும் ஆந்திராவில், 597 பேர் கரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். அவ்வாறான உயிரிழிப்பு விகிதமும் நகர்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.

ஆந்திராவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை 3,45,216 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை மட்டும் புதிதாக 1,10,315 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 நாள்களாக, தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆந்திராவில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா (24,000 பேர்), தமிழ்நாடு (7332 பேர்) கர்நாடகா (5,702 பேர்) டெல்லி (4,444 பேர்) ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திராவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவிட்-19, இதே வேகத்தில் ஆந்திராவில் பரவினால், விரைவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை டெல்லியைவிட அதிகரிக்கக்கூடும் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா மற்ற நோய்களுடன் இணைந்தால் ஆபத்தா... மருத்துவர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.