ETV Bharat / bharat

கோவிட்-19 நெருக்கடி: ஆந்திரா கோயில்களில் சிறப்பு யாகம்!

author img

By

Published : Jun 15, 2020, 10:30 AM IST

அமராவதி: ஆந்திராவில் பண்டைய கால கோயில்களில் உபநிடதங்கள் மற்றும் ஆகமங்களின்படி யாகம் நடத்துவதற்கான வழிமுறைகளை மாநில அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

Bhoumashvani  Arogya Bharat Yagna  Vedic rituals  Ashwani star  ஆரோக்கிய பாரத யாகம்  ஆந்திரா கோயில்கள்  ஸ்ரீ சைலம்  கோவிட்-19 நெருக்கடி
Bhoumashvani Arogya Bharat Yagna Vedic rituals Ashwani star ஆரோக்கிய பாரத யாகம் ஆந்திரா கோயில்கள் ஸ்ரீ சைலம் கோவிட்-19 நெருக்கடி

திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர் கே.வைத்தியநாதனுக்கு பதிலளிக்கும் வகையில் மாநில அறநிலையத்துறை புனித பூமாஷ்வானி தினமான நாளை (ஜூன்-16) ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக மாநில அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பூமாஷ்வானி நாளில் (16-06-20) அஸ்வினி நட்சத்திரத்தில் வேத நூல்களின் படி, பல்வேறு பண்டைய கோயில்களில் ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும். வேத மந்திரங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவை தொற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஒழிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், “கோவிட்-19 நெருக்கடி நேரத்தில் மனித குலத்துக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி இதுவாகும். நல்ல நாள்களில் நடத்தப்படும் யாகங்கள் அச்சுறுத்தலில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான ஒரு வழியாகும். சில பெரிய கோயில்கள் நடை பூட்டப்பட்டாலும், ஹோமங்கள் உள்ளிட்ட வழிபாட்டு பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆரோக்கிய யாகம் மாநிலம் முழுவதும் உள்ள 20 பழங்கால கோயில்களில் வேத சடங்குகள் முழங்க நடக்கும். நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரோக்கிய பாரத யாகம் நடைபெறும் கோயில்களில் ஸ்ரீசைலம், சிம்ஹாச்சலம், மங்களகிரி, அன்னாவரம், சிம்ஹாச்சலம், அராசவள்ளி ஆகியவை முக்கியமானவை ஆகும்.

ஆந்திராவில் ஐந்து ஆயிரத்து 965 கோவிட்-19 வைரஸ் பாதிப்பாளர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 253 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். உயிரிழப்பு 82 ஆக உள்ளது.

நாடு முழுக்க மூன்று லட்சத்துக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஒன்பது ஆயிரத்து 520 ஆக உள்ளது.

இதையும் படிங்க: இந்தியரை தாக்கிய நேபாள ஆயுதப்படை காவலர்கள்!

திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர் கே.வைத்தியநாதனுக்கு பதிலளிக்கும் வகையில் மாநில அறநிலையத்துறை புனித பூமாஷ்வானி தினமான நாளை (ஜூன்-16) ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக மாநில அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பூமாஷ்வானி நாளில் (16-06-20) அஸ்வினி நட்சத்திரத்தில் வேத நூல்களின் படி, பல்வேறு பண்டைய கோயில்களில் ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும். வேத மந்திரங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவை தொற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஒழிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், “கோவிட்-19 நெருக்கடி நேரத்தில் மனித குலத்துக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி இதுவாகும். நல்ல நாள்களில் நடத்தப்படும் யாகங்கள் அச்சுறுத்தலில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான ஒரு வழியாகும். சில பெரிய கோயில்கள் நடை பூட்டப்பட்டாலும், ஹோமங்கள் உள்ளிட்ட வழிபாட்டு பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆரோக்கிய யாகம் மாநிலம் முழுவதும் உள்ள 20 பழங்கால கோயில்களில் வேத சடங்குகள் முழங்க நடக்கும். நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரோக்கிய பாரத யாகம் நடைபெறும் கோயில்களில் ஸ்ரீசைலம், சிம்ஹாச்சலம், மங்களகிரி, அன்னாவரம், சிம்ஹாச்சலம், அராசவள்ளி ஆகியவை முக்கியமானவை ஆகும்.

ஆந்திராவில் ஐந்து ஆயிரத்து 965 கோவிட்-19 வைரஸ் பாதிப்பாளர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 253 பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். உயிரிழப்பு 82 ஆக உள்ளது.

நாடு முழுக்க மூன்று லட்சத்துக்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். ஒரு லட்சத்துக்கு 70 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஒன்பது ஆயிரத்து 520 ஆக உள்ளது.

இதையும் படிங்க: இந்தியரை தாக்கிய நேபாள ஆயுதப்படை காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.