ETV Bharat / bharat

மக்களவையின் ராஜா ஆனார் ஆ.ராசா! - குவியும் பாராட்டு

author img

By

Published : Jul 1, 2019, 11:30 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையைில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா அமர்ந்து அவையை வழிநடத்தினார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆ.ராசா

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மை என்றும் தோற்காது என்று ஆ.ராசா சூளுரைத்தார். தற்போது 2ஜி அலைக்கற்றையை வைத்து அவர் மீது பழிக்கப்பட்ட வார்த்தைகள் பொய்த்து போனது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.ஆனார் ஆ.ராசா.

பிரதமர் மோடி தலைமையிலான 17வது நாடாளுமன்றம் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடியது. ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் தினமும் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகிறார்கள்.

அவையில் சபாநாயகர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவரே அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இன்று மாலை 5 மணிக்கு மக்களவையை ஆ.ராசா வழிநடத்தினார். அப்போது, கேரளாவின் மாவேலிக்கரை எம்.பி. சுரேஷ் கொடிகுனில் தங்களது ஊர் பிரச்னை குறித்து பேசினார். தற்போது ஆ.ராசாவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூன்று முறைகளுக்கு மேல் மக்களவை உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள் அவையை வழிநடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் செய்ததாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மை என்றும் தோற்காது என்று ஆ.ராசா சூளுரைத்தார். தற்போது 2ஜி அலைக்கற்றையை வைத்து அவர் மீது பழிக்கப்பட்ட வார்த்தைகள் பொய்த்து போனது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.ஆனார் ஆ.ராசா.

பிரதமர் மோடி தலைமையிலான 17வது நாடாளுமன்றம் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடியது. ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்கள், காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் தினமும் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தும் வருகிறார்கள்.

அவையில் சபாநாயகர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவரே அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இன்று மாலை 5 மணிக்கு மக்களவையை ஆ.ராசா வழிநடத்தினார். அப்போது, கேரளாவின் மாவேலிக்கரை எம்.பி. சுரேஷ் கொடிகுனில் தங்களது ஊர் பிரச்னை குறித்து பேசினார். தற்போது ஆ.ராசாவிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூன்று முறைகளுக்கு மேல் மக்களவை உறுப்பினர்களாக பதவி வகிப்பவர்கள் அவையை வழிநடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரகூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். இதற்காக இரண்டு காசோலை கொடுத்தனர். மேலும் 50 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருவரும் பெற்றுள்ளனர். இதற்காக 5 காசோலை என மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர்.

ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி அளிக்காததால் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர்க்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார், மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், சைதாப்பேட்டை 3 ஆவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு சைதாப்பேட்டை 3 வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் இருவர் நேரில் ஆஜராகவில்லை. எனவே இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.