ETV Bharat / bharat

மதுபானத்திற்காக தந்தையை கொலைசெய்த மகன்!

author img

By

Published : Oct 16, 2020, 5:16 PM IST

திருவனந்தபுரம்: மதுபானத்திற்காக நடந்த தகராறில் தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

Son murdered father at Ernakulam
Son murdered father at Ernakulam

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சொந்த மகனால் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த பரதன் என்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மகன் விஷ்ணு வாங்கி வைத்திருந்த மதுபானத்தை தந்தை பரதன் குடித்ததன் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் விஷ்ணு ஆத்திரத்தில் தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பரதனின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த விஷ்ணு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மதுபானத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் கொலை வழக்கில் உறவினர் கைது!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சொந்த மகனால் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த பரதன் என்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மகன் விஷ்ணு வாங்கி வைத்திருந்த மதுபானத்தை தந்தை பரதன் குடித்ததன் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் விஷ்ணு ஆத்திரத்தில் தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பரதனின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மேலும் காயமடைந்த விஷ்ணு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மதுபானத்திற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் கொலை வழக்கில் உறவினர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.