சீக்கிய மதத்தின் குருவான குருநானக் தேவ் ஜியின் பிறந்தநாளை சீக்கியர்கள், ஆண்டுதோறும் நவ. 30ஆம் தேதி குருநானக் ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். அதனடிப்படையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடினர்.
அதேபோல இந்தியாவில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் ஜெயந்தியைக் கொண்டாடினர். அதில், பொற்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவில் மிளிரும் காட்சி வைரலாகிவருகிறது. மேலும் குருநானக் தேவின் 551ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குருநானக் ஜெயந்தி: வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!