ETV Bharat / bharat

சுங்கச்சாவடிகளின் வருமானம் இருமடங்காக உயரும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

author img

By

Published : Oct 16, 2019, 10:20 PM IST

டெல்லி: சுங்கச்சாவடிகளின் ஆண்டு வருமானம் இன்னும் ஐந்தாண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

nitin-gadkari

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தக் காத்திருப்பதால் கால தாமதம் உண்டாகிறது. அதைப் போக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை ஃபாஸ்டாக் என்னும் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடந்துவருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் பேசிய அவர், “தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 1.4 கிமீ தூரம் உள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் ஃபாஸ்டாக் அட்டை முறைக்கான தொழில்நுட்பம் 24 ஆயிரத்து 996 கிமீ தூரமுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அது இந்தாண்டு இறுதிக்குள் 27 ஆயிரம் கிமீ தூரத்தை எட்டிவிடும். எனவே அதன் பிறகு அதாவது டிசம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிக் கட்டணம் ஃபாஸ்டாக் அட்டைகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

தற்போது நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகள் மூலம் வருடத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துவருகிறது. மேலும் பல சாலைகளை அரசு அமைத்துவருகிறது. இதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த வருமானம் ரூ.1 லட்சம் கோடியை எட்டிவிடும். அவ்வாறு வருமானம் வரும்போது நாம் வங்கிகளிலிருந்து அதிகம் கடன் பெற முடியும். அந்தப் பணத்தின் மூலம் பல திட்டங்களை இயற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் இந்தியா சறுக்கல்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சிங்கை நாடு!

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தக் காத்திருப்பதால் கால தாமதம் உண்டாகிறது. அதைப் போக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை ஃபாஸ்டாக் என்னும் அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடந்துவருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அதில் பேசிய அவர், “தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 1.4 கிமீ தூரம் உள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் ஃபாஸ்டாக் அட்டை முறைக்கான தொழில்நுட்பம் 24 ஆயிரத்து 996 கிமீ தூரமுள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அது இந்தாண்டு இறுதிக்குள் 27 ஆயிரம் கிமீ தூரத்தை எட்டிவிடும். எனவே அதன் பிறகு அதாவது டிசம்பர் 1ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிக் கட்டணம் ஃபாஸ்டாக் அட்டைகள் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

தற்போது நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகள் மூலம் வருடத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துவருகிறது. மேலும் பல சாலைகளை அரசு அமைத்துவருகிறது. இதனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த வருமானம் ரூ.1 லட்சம் கோடியை எட்டிவிடும். அவ்வாறு வருமானம் வரும்போது நாம் வங்கிகளிலிருந்து அதிகம் கடன் பெற முடியும். அந்தப் பணத்தின் மூலம் பல திட்டங்களை இயற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் இந்தியா சறுக்கல்; அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சிங்கை நாடு!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.