நாம் அன்றாடம் உணவில் வாசனை மற்றும் தனித்துவ ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளும் கருவேப்பிலை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது. கருவேப்பிலையின் ஐந்து முக்கியப் பயன்களை ஆயுர்வேத மருத்துவர் கல்பேஷ் பாபன்னா பகிர்ந்துள்ளார். அவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
- வயிற்றுக்கோளாறு உள்ளவர்களுக்கு கருவேப்பிலை நல்ல மருந்தாகும். வெறும் வயிற்றில் கருவேப்பிலையை பச்சையாகவோ அல்லது தயிருடன் கலந்தோ உண்டால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது கருவேப்பிலை. வயிற்றில் ஏற்படும் பாக்டீரியாத் தொற்றை கருவேப்பிலை குணப்படுத்தும்.
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கருவேப்பிலை சிறந்த மருந்தாகும். உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கருவேப்பிலை பெரும்பங்காற்றுகிறது.
- கண்கள், பார்வை தொடர்பான குறைபாடுகளைச் சீர்செய்ய கருவேப்பிலை உதவும். கருவேப்பிலையை முறையாக உட்கொண்டால் கண்புரை போன்ற சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
- முடிஉதிரும் சிக்கலைப் போக்க கருவேப்பிலை மகத்துவமான பங்களிப்பைத் தருகிறது. மேலும், கருவேப்பிலை தொடர்ச்சியாக உட்கொண்டால் முடி வளர்ச்சி பெரும் வாய்ப்புகளும் உண்டு.
இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!