டெல்லியில் 22 ஆண்டுகால மோசமான வரலாற்றுச் சம்பவம் மீண்டும் திரும்பி உள்ளது. 1997ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வெள்ளிக் கிழமை டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள உபார் திரையரங்கில் தீ விபத்து நடந்தது.
இந்த தீ விபத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு டெல்லியின் ராணி ஜான்சி சாலைப் பகுதியில் ஒரு நெரிசலான சந்தையின் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டனர். இது உபார் திரையரங்கு தீ விபத்து சோகத்திற்குப் பிறகு டெல்லியின் இரண்டாவது மிக மோசமான தீ விபத்து இது ஆகும். உபார் தளத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 27 கார்களை வெளியேற்றும் பார்க்கிங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ மளமளவென பரவி திரையரங்கில் இருந்த 59 பேரின் உயிரை பலி வாங்கியது. இந்த தீ விபத்தானது அதிகாலை 3-6 மணிக்குள் நடந்தது. ஆனஜ் மண்டி தீ விபத்தும் அதிகாலை நடந்துள்ளது.
ஒரு நீண்ட சட்டச் சிக்கலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உபார் தீ விபத்து வழக்கில், 2015 ஆம் ஆண்டில், விசாரணை நீதிமன்றம், தியேட்டருக்குச் சொந்தமான அன்சால் சகோதரர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும், அவர்களின் வயது காரணமாக அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்தது. பின்னர் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, அது கோபால் அன்சலை ஒரு வருடம் சிறைக்கு அனுப்பியது, சுஷில் அன்சல் விடுவிக்கப்பட்டார்.

அனஜ் மண்டி தீ விபத்து நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. அதிகாலை நேரம் என்பதால் நடக்கும் விபரீதம் அறியாமல் மக்கள் அசந்து தூங்கியுள்ளனர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு!