ETV Bharat / bharat

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி.யில் பயங்கரம்!

author img

By

Published : Dec 13, 2020, 1:03 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

7-year-old-
7-year-old-

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புதானா என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 13) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகினார். சிறுமியின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கூரையில் உடல் முழுவதும் ரத்தக் கசிவுடன் மயங்கிய நிலையில் சிறுமி மீட்கப்பட்டார். அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சிறுமியை அருகிலிருந்த வீட்டிற்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும், பின்னர் மயங்கிய நிலையில் அச்சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடர்பாகச் சிறுமியில் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைதுசெய்தனர்.

அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டம் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புதானா என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 13) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகினார். சிறுமியின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கூரையில் உடல் முழுவதும் ரத்தக் கசிவுடன் மயங்கிய நிலையில் சிறுமி மீட்கப்பட்டார். அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சிறுமியை அருகிலிருந்த வீட்டிற்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும், பின்னர் மயங்கிய நிலையில் அச்சிறுமியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இது தொடர்பாகச் சிறுமியில் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைதுசெய்தனர்.

அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டம் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.