ETV Bharat / bharat

அஸ்ஸாமில் தடை செய்யப்பட்ட ஏபிடி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

author img

By

Published : Sep 12, 2022, 8:17 PM IST

அஸ்ஸாமில் தடை செய்யப்பட்ட அன்சாருல்லா பங்களா அணியினருடன் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Assam
Assam

மோரிகான்: கடந்த ஜூலை மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், சில பயங்கரவாதிகளுக்கு அவரது மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார், அவருக்கு சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து மூன்று மதரஸாக்கள் இடிக்கப்பட்டன.

அல்காய்தா பயங்கரவாதிகளின் மையமாக மதரஸாக்கள் செயல்பட்டதன் காரணமாகவே அவை இடிக்கப்பட்டதாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா தெரிவித்தார். அசாமில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அசாம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட அன்சாருல்லா பங்களா அணி (ABT) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் முசாதிக் ஹுசைன், இக்ராமுல் இஸ்லாம் என தெரியவந்துள்ளது. இதில் இக்ராமுல் ஒரு இமாம் என போலீசார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து, இதுவரை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நூஹ் மதராஸா கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட் - 13 வயது சிறுவனே சக நண்பனை கொலை செய்தது அம்பலம்!

மோரிகான்: கடந்த ஜூலை மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்த முப்தி முஸ்தபா என்பவர், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், சில பயங்கரவாதிகளுக்கு அவரது மதரஸாவில் அடைக்கலம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார், அவருக்கு சொந்தமான மதரஸா இடிக்கப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து மூன்று மதரஸாக்கள் இடிக்கப்பட்டன.

அல்காய்தா பயங்கரவாதிகளின் மையமாக மதரஸாக்கள் செயல்பட்டதன் காரணமாகவே அவை இடிக்கப்பட்டதாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா தெரிவித்தார். அசாமில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அசாம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட அன்சாருல்லா பங்களா அணி (ABT) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் முசாதிக் ஹுசைன், இக்ராமுல் இஸ்லாம் என தெரியவந்துள்ளது. இதில் இக்ராமுல் ஒரு இமாம் என போலீசார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து, இதுவரை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நூஹ் மதராஸா கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட் - 13 வயது சிறுவனே சக நண்பனை கொலை செய்தது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.