ETV Bharat / bharat

Army Day: முப்படைத் தளபதிகள் போர் நினைவிடத்தில் மரியாதை

author img

By

Published : Jan 15, 2022, 2:38 PM IST

Updated : Jan 15, 2022, 2:44 PM IST

ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவத் தளபதி எம்.எம். நரவணே, விமானப்படைத் தளபதி வி.ஆர். சௌத்ரி, கடற்படைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Army Day
Army Day

டெல்லி: ராணுவ நாள் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக, ஃபீல்டு மார்ஷல் கோதண்டேரா எம். கரியப்பா பொறுப்பேற்றார்.

இதைக் கொண்டாடும்விதமாக ஆண்டுதோறும் ராணுவ நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படையின் தளபதிகள் ராணுவப்படைத் தளபதி எம்.எம். நரவணே, விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி, கடற்படைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது இந்திய ராணுவ வீரர்கள் சவாலான பகுதிகளில் சேவையாற்றுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் சக குடிமக்களுக்கு முன்னின்று உதவுகின்றனர். இந்தியாவின் அமைதியைக் காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Best wishes on the occasion of Army Day, especially to our courageous soldiers, respected veterans and their families. The Indian Army is known for its bravery and professionalism. Words cannot do justice to the invaluable contribution of the Indian Army towards national safety. pic.twitter.com/UwvmbVD1hq

    — Narendra Modi (@narendramodi) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "இந்தியாவின் பாதுகாப்பிற்கு ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, அமைதியைப் பேணுவதில் நமது வீரர்கள் நேர்த்தியான தொழில்முறை, தியாகம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். உங்கள் சேவைக்கு நாடு நன்றி கூறுகிறது. ஜெய் ஹிந்த்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Greetings to Army personnel and veterans on Army Day. Indian Army has been pivotal in ensuring national security. Our soldiers have displayed professionalism, sacrifice and valour in defending borders and maintaining peace. The nation is grateful for your service. Jai Hind!

    — President of India (@rashtrapatibhvn) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ARMY DAY: இந்திய ராணுவம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ

டெல்லி: ராணுவ நாள் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம்தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக, ஃபீல்டு மார்ஷல் கோதண்டேரா எம். கரியப்பா பொறுப்பேற்றார்.

இதைக் கொண்டாடும்விதமாக ஆண்டுதோறும் ராணுவ நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படையின் தளபதிகள் ராணுவப்படைத் தளபதி எம்.எம். நரவணே, விமானப்படை தளபதி வி.ஆர். சௌத்ரி, கடற்படைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது இந்திய ராணுவ வீரர்கள் சவாலான பகுதிகளில் சேவையாற்றுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் உள்ளிட்ட நெருக்கடியான காலகட்டத்தில் சக குடிமக்களுக்கு முன்னின்று உதவுகின்றனர். இந்தியாவின் அமைதியைக் காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை எண்ணி இந்தியா பெருமைகொள்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Best wishes on the occasion of Army Day, especially to our courageous soldiers, respected veterans and their families. The Indian Army is known for its bravery and professionalism. Words cannot do justice to the invaluable contribution of the Indian Army towards national safety. pic.twitter.com/UwvmbVD1hq

    — Narendra Modi (@narendramodi) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "இந்தியாவின் பாதுகாப்பிற்கு ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லைப் பாதுகாப்பு, அமைதியைப் பேணுவதில் நமது வீரர்கள் நேர்த்தியான தொழில்முறை, தியாகம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். உங்கள் சேவைக்கு நாடு நன்றி கூறுகிறது. ஜெய் ஹிந்த்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Greetings to Army personnel and veterans on Army Day. Indian Army has been pivotal in ensuring national security. Our soldiers have displayed professionalism, sacrifice and valour in defending borders and maintaining peace. The nation is grateful for your service. Jai Hind!

    — President of India (@rashtrapatibhvn) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ARMY DAY: இந்திய ராணுவம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ

Last Updated : Jan 15, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.