ETV Bharat / bharat

ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள் - ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள்

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று (ஏப். 4) தொடங்கிவைத்தார்.

ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள்
ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள்
author img

By

Published : Apr 4, 2022, 11:35 AM IST

அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் 13 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அம்மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. அதனை, முதலமைச்சர் ஜெகன்மோகன் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிணைந்த ஆந்திர பிரதேசம் இரண்டாக பிரிந்த நிலையில், இன்றைய தினம் ஆந்திரா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கிராம, வார்டு செயலகங்களை அமைத்து அதிகாரப் பரவலாக்கத்திற்கு அம்மாநில அரசு முதலடியை எடுத்துவைத்துள்ளது. தற்போது, இந்த 13 புதிய மாவட்டங்களால், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நெல்லூர் முதலிடத்தில் உள்ளது. பிரகாசம் மாவட்டம் பரப்பளவில் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும். இது 14,322 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.

ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள்
ஆந்திராவின் புதிய வரைப்படம்

மாவட்டங்கள் விவரம்

புதிய மாவட்டம்பிரிக்கப்பட்ட மாவட்டம்
மாண்யம்விஜயநகரம்
அனக்காபள்ளிவிசாகப்பட்டினம்
அல்லூரி சித்தாராம ராஜூவிசாகப்பட்டினம்
காகிநாடா கிழக்கு கோதவரி
கோனாசீமாகிழக்கு கோதவரி
எல்லூருமேற்கு கோதவரி
பால்நாடுகுண்டூர்
பாபட்லாகுண்டூர்
நந்தியால்கர்னூல்
ஸ்ரீ சத்திய சாய்அனந்தபூர்
ஸ்ரீ பாலாஜிசித்தூர்
அன்னமயாகடப்பா
என் டி ராமா ராவ்கிருஷ்ணா

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!

அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் 13 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அம்மாவட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. அதனை, முதலமைச்சர் ஜெகன்மோகன் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒன்றிணைந்த ஆந்திர பிரதேசம் இரண்டாக பிரிந்த நிலையில், இன்றைய தினம் ஆந்திரா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கிராம, வார்டு செயலகங்களை அமைத்து அதிகாரப் பரவலாக்கத்திற்கு அம்மாநில அரசு முதலடியை எடுத்துவைத்துள்ளது. தற்போது, இந்த 13 புதிய மாவட்டங்களால், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் நெல்லூர் முதலிடத்தில் உள்ளது. பிரகாசம் மாவட்டம் பரப்பளவில் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும். இது 14,322 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.

ஆந்திராவில் உதயமானது 13 புதிய மாவட்டங்கள்
ஆந்திராவின் புதிய வரைப்படம்

மாவட்டங்கள் விவரம்

புதிய மாவட்டம்பிரிக்கப்பட்ட மாவட்டம்
மாண்யம்விஜயநகரம்
அனக்காபள்ளிவிசாகப்பட்டினம்
அல்லூரி சித்தாராம ராஜூவிசாகப்பட்டினம்
காகிநாடா கிழக்கு கோதவரி
கோனாசீமாகிழக்கு கோதவரி
எல்லூருமேற்கு கோதவரி
பால்நாடுகுண்டூர்
பாபட்லாகுண்டூர்
நந்தியால்கர்னூல்
ஸ்ரீ சத்திய சாய்அனந்தபூர்
ஸ்ரீ பாலாஜிசித்தூர்
அன்னமயாகடப்பா
என் டி ராமா ராவ்கிருஷ்ணா

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.