ETV Bharat / bharat

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு வேலை; அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு..!

பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு அரசு பணியிடங்களில் 10 சதவிகித இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகப பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடு ஆபத்துக்குள்ளாகும் நிலை உருவாகும் எனவும், எனவே அதனை நிறுத்த வேண்டும் எனவும், புதுச்சேரி காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

author img

By

Published : Nov 3, 2022, 1:22 PM IST

பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம்
பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம்

புதுச்சேரி: அரசு துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மேல்நிலை எழுத்தர் ( UDC) பணிக்கான தேர்வில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய(EWS) பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு அறிவித்திருக்கிறது.

இதனை எதிர்த்து முதலியார்பேட்டையில்‌ உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ செந்தில்குமார்,விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட கழகம்,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்றன.

புதுச்சேரி அரசின் இந்த செயல் சமூக நீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்‌. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பெரும் ஆபத்துக்குள்ளாகும். புதுச்சேரி அரசு இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும், சமூக நீதியை பாதுகாத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி; பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? - அன்புமணி ராமதாஸ்

புதுச்சேரி: அரசு துறைகளில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மேல்நிலை எழுத்தர் ( UDC) பணிக்கான தேர்வில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய(EWS) பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அரசு அறிவித்திருக்கிறது.

இதனை எதிர்த்து முதலியார்பேட்டையில்‌ உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், திமுக எம்எல்ஏ செந்தில்குமார்,விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட கழகம்,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்றன.

புதுச்சேரி அரசின் இந்த செயல் சமூக நீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானதாகும்‌. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு பெரும் ஆபத்துக்குள்ளாகும். புதுச்சேரி அரசு இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும், சமூக நீதியை பாதுகாத்திட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி; பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.