ETV Bharat / bharat

ஆலியாபட்டை தேடிய 20 லட்சம் பேர்! - எதற்காக தெரியுமா?

author img

By

Published : Jun 28, 2022, 3:36 PM IST

Updated : Jun 28, 2022, 3:57 PM IST

பாலிவுட் ஜோடிகளான ஆலியாபட் - ரன்பீர் கபூர் வெளியிட்ட கர்ப்ப செய்தியை அடுத்து இணையத்தில் அவர்கள் இருவர் குறித்த ஒருமுக்கிய செய்தியை 20 லட்சம் பேர் தேடி இருக்கின்றனர்.

ஆலியாபட்டை தேடிய 20 லட்சம் பேர்!- எதற்காக தெரியுமா?
ஆலியாபட்டை தேடிய 20 லட்சம் பேர்!- எதற்காக தெரியுமா?

இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் ஜோடி ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இவர்கள் கடந்த ஏப்ரலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ஆலியா பட் அவரது படப்பிடிப்பிற்காக லண்டனில் உள்ளார்.

இந்நிலையில் ரன்பீரும், ஆலியாவும் நேற்று(ஜூன்27) அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியான பதிவு ஒன்றைப்பதிவிட்டனர். இப்பதிவையடுத்து அம்மாவாக போகும் ஆலியாவிற்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பாலிவுட்டில் க்யூட் ஜோடியான ஆலியா-ரன்பீரின் இந்த நற்செய்தியால் ஆலியாவின் ரசிகர்கள் குதூகலத்துடன் பதிவுகளையும், மீம்ஸ்களையும் போட்டு வந்தனர்.

ஆலியாவிற்கு ஒரு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த வேளையில் பலர், இந்த ஜோடியின் திருமண தேதியை அதிகமாக தேடிய செய்தி வெளியாகியுள்ளது. சினிமாவில் டாப் கதாநாயகிகளை பொறுத்தவரை திருமணமாகி குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே குழந்தைப் பெற்றுள்ளனர். இதற்கு மத்தியில் ஆலியா திருமணமாகி இரண்டே மாதங்களில் கருவுற்று இருப்பது அவரது தீவிர ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இதன் பின்னர் அவர் படங்கள் நடிப்பாரா இல்லை, இதோடு இவரது சினிமா கரியரை முடித்துக் கொள்வாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆலியா-ரன்பீர் இரண்டு மாதங்களுக்கு முன்னே திருமணம் செய்திருந்த நிலையில் இவர்களது குழந்தை குறித்த செய்தி வெளியானதும், இணையத்தில் இவர்களது திருமணமான தேதியை 20 லட்சம் பேர் தேடியுள்ளார்கள்.

இதனால் நேற்றைய செய்தி தளங்களில் அதிகமாக தேடப்பட்ட செய்தியாகவும் இருவரின் திருமண தேதி இருந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது குறித்து சிலர் அவதூறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இது ஆலியாவின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அம்மாவாக போகும் ஆலியா பட்- இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்

இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் ஜோடி ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர். இவர்கள் கடந்த ஏப்ரலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ஆலியா பட் அவரது படப்பிடிப்பிற்காக லண்டனில் உள்ளார்.

இந்நிலையில் ரன்பீரும், ஆலியாவும் நேற்று(ஜூன்27) அவர்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியான பதிவு ஒன்றைப்பதிவிட்டனர். இப்பதிவையடுத்து அம்மாவாக போகும் ஆலியாவிற்கு பல திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். பாலிவுட்டில் க்யூட் ஜோடியான ஆலியா-ரன்பீரின் இந்த நற்செய்தியால் ஆலியாவின் ரசிகர்கள் குதூகலத்துடன் பதிவுகளையும், மீம்ஸ்களையும் போட்டு வந்தனர்.

ஆலியாவிற்கு ஒரு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த வேளையில் பலர், இந்த ஜோடியின் திருமண தேதியை அதிகமாக தேடிய செய்தி வெளியாகியுள்ளது. சினிமாவில் டாப் கதாநாயகிகளை பொறுத்தவரை திருமணமாகி குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னரே குழந்தைப் பெற்றுள்ளனர். இதற்கு மத்தியில் ஆலியா திருமணமாகி இரண்டே மாதங்களில் கருவுற்று இருப்பது அவரது தீவிர ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இதன் பின்னர் அவர் படங்கள் நடிப்பாரா இல்லை, இதோடு இவரது சினிமா கரியரை முடித்துக் கொள்வாரா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆலியா-ரன்பீர் இரண்டு மாதங்களுக்கு முன்னே திருமணம் செய்திருந்த நிலையில் இவர்களது குழந்தை குறித்த செய்தி வெளியானதும், இணையத்தில் இவர்களது திருமணமான தேதியை 20 லட்சம் பேர் தேடியுள்ளார்கள்.

இதனால் நேற்றைய செய்தி தளங்களில் அதிகமாக தேடப்பட்ட செய்தியாகவும் இருவரின் திருமண தேதி இருந்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது குறித்து சிலர் அவதூறான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இது ஆலியாவின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அம்மாவாக போகும் ஆலியா பட்- இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்

Last Updated : Jun 28, 2022, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.