ETV Bharat / bharat

டியூட்டி டைம் ஓவர்... ஓவர் டைம் பார்க்க விமானி மறுப்பு! 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள்!

author img

By

Published : Jun 26, 2023, 3:25 PM IST

Updated : Jun 26, 2023, 4:01 PM IST

பணி நேரம் முடிந்ததால் கூடுதல் நேரம் வேலை பார்க்க முடியாது என விமானி கூறியதால் டெல்லி செல்ல வேண்டிய பயணிகள் ஜெய்ப்பூர் விமான நிலையில் 6 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Air India
Air India

ஜெய்ப்பூர் : பணி நேரம் முடிந்ததால் மேற்கொண்டு வேலை பார்க்க முடியாது என ஏர் இந்தியா விமானி கூறியதால், லண்டனில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், ஜெய்ப்பூரில் 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு மீண்டும் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவின் AI Flight 112 என்ற விமானம் கிளம்பியது. டெல்லிக்கு அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், மோசமான வானிலை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மேற்கொண்டு விமானத்தை இயக்க விமானி மறுப்பது தெரிய வந்தது. தனது பணி நேரம் முடிந்து விட்டதாகவும், சிவில் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின் படி தன்னால் கூடுதல் நேரம் பணியாற்ற முடியாது என விமானி கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விமானம் மேற்கொண்டு நகர முடியாமல் இயங்கா நிலைக்கு திரும்பியது. கடும் விரக்திக்குள்ளான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருப்பது, ஏர் இந்தியா ஊழியர்களுடன் விவாதிப்பது தொடர்பான வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்த சிந்தியாவிடம் முறையிட்டனர்.

இந்த பதவி வேகமாக பகிரப்பட்ட நிலையில், பயணிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் இருந்து வால்வோ பேருந்து மூலம் டெல்லிக்கு பாதி பயணிகள் சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகள் வாடகை கார்கள் மூலமாக டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு அதே எர் இந்தியா விமானத்தில் பயணித்த செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏறத்தாழ 6 மணி நேரத்திற்கு பின் பயணிகள், டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கடந்த ஜூன் 22ஆம் தேதி, அனுமதியின்றி பயணி ஒருவரை விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குள் அனுமதித்த காரணத்திற்காக விமானியின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உள்நாட்டு விமான இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சண்டிகரில் இருந்து லே சென்ற விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அனுமதியின்றி பயணியை விமானிகள் அறைக்குள் அனுமதித்து விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்காத காரணத்திற்காக அந்த விமானத்தின் மூத்த விமானியையும் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து டிஜிசிஏ உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எது மோடி அரசின் சாதனை? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி!

ஜெய்ப்பூர் : பணி நேரம் முடிந்ததால் மேற்கொண்டு வேலை பார்க்க முடியாது என ஏர் இந்தியா விமானி கூறியதால், லண்டனில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், ஜெய்ப்பூரில் 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு மீண்டும் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவின் AI Flight 112 என்ற விமானம் கிளம்பியது. டெல்லிக்கு அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், மோசமான வானிலை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மேற்கொண்டு விமானத்தை இயக்க விமானி மறுப்பது தெரிய வந்தது. தனது பணி நேரம் முடிந்து விட்டதாகவும், சிவில் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின் படி தன்னால் கூடுதல் நேரம் பணியாற்ற முடியாது என விமானி கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விமானம் மேற்கொண்டு நகர முடியாமல் இயங்கா நிலைக்கு திரும்பியது. கடும் விரக்திக்குள்ளான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருப்பது, ஏர் இந்தியா ஊழியர்களுடன் விவாதிப்பது தொடர்பான வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்த சிந்தியாவிடம் முறையிட்டனர்.

இந்த பதவி வேகமாக பகிரப்பட்ட நிலையில், பயணிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, ஜெய்ப்பூரில் இருந்து வால்வோ பேருந்து மூலம் டெல்லிக்கு பாதி பயணிகள் சாலை மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகள் வாடகை கார்கள் மூலமாக டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு அதே எர் இந்தியா விமானத்தில் பயணித்த செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏறத்தாழ 6 மணி நேரத்திற்கு பின் பயணிகள், டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கடந்த ஜூன் 22ஆம் தேதி, அனுமதியின்றி பயணி ஒருவரை விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குள் அனுமதித்த காரணத்திற்காக விமானியின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உள்நாட்டு விமான இயக்குநரகம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சண்டிகரில் இருந்து லே சென்ற விமானத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அனுமதியின்றி பயணியை விமானிகள் அறைக்குள் அனுமதித்து விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக் கேட்காத காரணத்திற்காக அந்த விமானத்தின் மூத்த விமானியையும் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து டிஜிசிஏ உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எது மோடி அரசின் சாதனை? - நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி!

Last Updated : Jun 26, 2023, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.