ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகும் விமான நிறுவனங்கள்!

author img

By

Published : Nov 22, 2020, 7:10 PM IST

கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சரக்கு விமான நிறுவனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

ac
ac

கரோனா தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையை நெருங்கியுள்ளன. விரைவில், மக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதால், மருந்துகளை கொண்டு வருவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையுடன் கணக்கிட்டால், நிச்சயமாக கோடிக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரே நாளில் அதிகப்படியான விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன.

பல்வேறு பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றி இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி மருந்துகளின் முன்னேற்றம் தொடர்பாக மாடர்னா, ஃபைசர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மும்மையில் உள்ள சிஎஸ்எம்ஐஏ விமான நிலையம் தான் நாட்டின் மிகப்பெரிய பார்மா நுழைவாயில் ஆகும். இது கோவிட் -19 தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கான தற்காலிக நடவடிக்கைகளான ஸ்லாட்களை தீர்மானிக்கிறது. ஸ்லாட் என்பது ஒரு விமானம் புறப்பட அல்லது விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் ஆகும்.

இது குறித்து விமான சரக்கு ஆபரேட்டர் ப்ளூ டார்ட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கரோனா தடுப்பூசி போக்குவரத்துக்காக ஆறு போயிங் 757 சரக்கு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. மும்பை, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், புனே, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, புனே போன்ற எட்டு முக்கிய இடங்களில் பார்மா-தர கண்டிஷனிங் அறைகள் உள்ளன. இந்த அறைகள் எங்கள் ப்ளூ டார்ட் விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ளன" என்றார்.

மேலும், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் DIAL செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஆண்டுக்கு 1.5 லட்சம் மில்லியன் டன்களை கையாளும் திறன் கொண்ட இரண்டு சரக்கு முனையங்கள் உள்ளன. அவை "அதிநவீன வெப்பநிலை கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளன. + 25 சி முதல் -20 சி வரை எளிதாக கையாள்வதால் COVID 19 தடுப்பூசிகளை விநியோகிக்க மிகவும் உகந்ததாக இருக்கும். இது தவிர, முனையத்திற்கும் விமானத்திற்கும் இடையிலான வெப்பநிலை உணர்திறன் சரக்கு இயக்கத்தின் போது உடைக்கப்படாத குளிர் சங்கிலியை உறுதி செய்யும் ஏர்சைடில் குளிர் அமைப்புகளும் எங்களிடம் உள்ளது" என்றார்.

கரோனா தடுப்பூசி மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையை நெருங்கியுள்ளன. விரைவில், மக்களின் பயன்பாட்டிற்கு வர இருப்பதால், மருந்துகளை கொண்டு வருவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையுடன் கணக்கிட்டால், நிச்சயமாக கோடிக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரே நாளில் அதிகப்படியான விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன.

பல்வேறு பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றி இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி மருந்துகளின் முன்னேற்றம் தொடர்பாக மாடர்னா, ஃபைசர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மும்மையில் உள்ள சிஎஸ்எம்ஐஏ விமான நிலையம் தான் நாட்டின் மிகப்பெரிய பார்மா நுழைவாயில் ஆகும். இது கோவிட் -19 தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கான தற்காலிக நடவடிக்கைகளான ஸ்லாட்களை தீர்மானிக்கிறது. ஸ்லாட் என்பது ஒரு விமானம் புறப்பட அல்லது விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் ஆகும்.

இது குறித்து விமான சரக்கு ஆபரேட்டர் ப்ளூ டார்ட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கரோனா தடுப்பூசி போக்குவரத்துக்காக ஆறு போயிங் 757 சரக்கு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. மும்பை, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், புனே, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, புனே போன்ற எட்டு முக்கிய இடங்களில் பார்மா-தர கண்டிஷனிங் அறைகள் உள்ளன. இந்த அறைகள் எங்கள் ப்ளூ டார்ட் விமான நிலையத்திற்கு அருகிலேயே உள்ளன" என்றார்.

மேலும், டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் DIAL செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஆண்டுக்கு 1.5 லட்சம் மில்லியன் டன்களை கையாளும் திறன் கொண்ட இரண்டு சரக்கு முனையங்கள் உள்ளன. அவை "அதிநவீன வெப்பநிலை கட்டுப்பாட்டு மண்டலங்களைக் கொண்டுள்ளன. + 25 சி முதல் -20 சி வரை எளிதாக கையாள்வதால் COVID 19 தடுப்பூசிகளை விநியோகிக்க மிகவும் உகந்ததாக இருக்கும். இது தவிர, முனையத்திற்கும் விமானத்திற்கும் இடையிலான வெப்பநிலை உணர்திறன் சரக்கு இயக்கத்தின் போது உடைக்கப்படாத குளிர் சங்கிலியை உறுதி செய்யும் ஏர்சைடில் குளிர் அமைப்புகளும் எங்களிடம் உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.