ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளித்த இளம்பெண் - அதிர்ச்சி பின்னணி!

author img

By

Published : Jul 27, 2022, 9:34 PM IST

2010 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, 12 ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape
rape

பெங்களூரு: இளம்பெண் ஒருவர், தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு, தனக்கு ஆறு வயதாக இருந்தபோது, பெற்றோர் வேலைக்கு செல்லும்போது தன்னை பக்கத்து வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு தனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்த இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததால், அதே பகுதியில் வசித்த பெண்மணி ஒருவரிடம் கூறி, அவர்களை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். தன்னிடம் ஆபாசப் படங்களை காண்பித்து, 14 வயது வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சைமன் பீட்டர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், 6 பேர் குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை...ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

பெங்களூரு: இளம்பெண் ஒருவர், தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு, தனக்கு ஆறு வயதாக இருந்தபோது, பெற்றோர் வேலைக்கு செல்லும்போது தன்னை பக்கத்து வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு தனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்த இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததால், அதே பகுதியில் வசித்த பெண்மணி ஒருவரிடம் கூறி, அவர்களை எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். தன்னிடம் ஆபாசப் படங்களை காண்பித்து, 14 வயது வரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சைமன் பீட்டர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், 6 பேர் குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை...ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.