ETV Bharat / bharat

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் ஆபாச புகைப்படம் பதிவு: பள்ளி மாணவி தற்கொலை

author img

By

Published : Jun 4, 2022, 7:33 AM IST

இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி மாணவியின் பெயரில் போலி கணக்கு தொடங்கி, ஆபாச புகைப்படம் பதிவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் ஆபாச புகைப்படம் பதிவு
இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் ஆபாச புகைப்படம் பதிவு

தெலங்கானா: அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி இன்ஸ்டாகிராம் பயனாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி மாணவியின் பெயரில் போலி கணக்கு தொடங்கி, மாணவியின் போட்டோவை டிபியில் (DP Display picture) வைத்து ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக
தற்கொலை எதற்கும் தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

இதையறிந்த மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து தாயிடம் தெரிவித்த நிலையில், அவரும் மகளை சமாதானம் செய்து, தீர்வு காண்பதாக கூறியுள்ளார். ஆனால் மாணவி அதிலிருந்த மீளவில்லை எனத் தெரிகிறது. இந்தநிலையில், கடந்த மே 29ஆம் தேதி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து பெற்றோர் மகளை மீட்டு அடிலாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிசிக்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மே30 ஆம் தேதி மாணவி சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம்! இருவர் மீது துப்பாக்கிச் சூடு

தெலங்கானா: அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி இன்ஸ்டாகிராம் பயனாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பள்ளி மாணவியின் பெயரில் போலி கணக்கு தொடங்கி, மாணவியின் போட்டோவை டிபியில் (DP Display picture) வைத்து ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக
தற்கொலை எதற்கும் தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

இதையறிந்த மாணவி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து தாயிடம் தெரிவித்த நிலையில், அவரும் மகளை சமாதானம் செய்து, தீர்வு காண்பதாக கூறியுள்ளார். ஆனால் மாணவி அதிலிருந்த மீளவில்லை எனத் தெரிகிறது. இந்தநிலையில், கடந்த மே 29ஆம் தேதி மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து பெற்றோர் மகளை மீட்டு அடிலாபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிசிக்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மே30 ஆம் தேதி மாணவி சிசிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம்! இருவர் மீது துப்பாக்கிச் சூடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.